Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது: ஆர்.எஸ்.பாரதி கருத்து
    மாநிலம்

    விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது: ஆர்.எஸ்.பாரதி கருத்து

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது: ஆர்.எஸ்.பாரதி கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: “விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர்” என்று திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

    புதுவை கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் சிலை, நுாலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவில், தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரியில் ஏற்கனவே பாரூக் மரைக்காயர், எம்.டி.ராமச்சந்திரன், ஆர்.வீ.ஜானகிராமன் என 3 முதல்வர்கள் திமுக சார்பில் இருந்துள்ளார்கள். 4 முறை ஆட்சியமைத்துள்ள நிலையில், தற்போது 5வது முறையாக திமுக ஆட்சியமைக்க உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

    அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்லும் வகையில் பணியாற்றுகிறோம். தொகுதி பங்கீடு குறித்து உள்ளூர் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதுகுறித்து இறுதி முடிவை ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் எடுப்பார்கள்.

    தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என அதிமுக – தவெக போன்ற கட்சிகள் சொல்கிறார்கள், எங்களுக்கு யார் போட்டி என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும், தற்போதைய சூழலில் நாங்கள் வலுவாக உள்ளோம். கடந்த 2019ல் இருந்தே எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார், ஆனால் தற்போது அவர் கட்சியில் இருந்தே பாதி பேர் வெளியேறிவிட்டனர். முதலில் எடப்பாடி அவர் நிலைமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

    விஜய் செல்லும் இடமெல்லாம் அதிக கூட்டம் கூடுவதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, “பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக, தயவு செய்து விஜய் பற்றி கேட்காதீர்கள். கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர்.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை

    September 24, 2025
    மாநிலம்

    “தவெக தலைவர் விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது” – திருமாவளவன் கருத்து

    September 24, 2025
    மாநிலம்

    புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முன்னாள் முதல்வர் நாராயணசாமி திடீர் போராட்டம்

    September 24, 2025
    மாநிலம்

    கிலோ மீட்டர் அலவன்ஸை 25% உயர்த்தக் கோரி சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

    September 24, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

    September 24, 2025
    மாநிலம்

    மதுரை ஹாக்கி மைதானம் தென் தமிழக வீரர்கள் பயிற்சி எடுக்க சிறந்த தளம் : உதயநிதி பெருமிதம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தைராய்டு புராணங்கள் எதிராக உண்மைகள்: தைராய்டு ஆரோக்கியம் பற்றிய 10 பொதுவான தவறான எண்ணங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அறிவியல் புஷ்: அமைச்சரவை ரூ .2,277 கோடி சி.எஸ்.ஐ.ஆர் திறன் மேம்பாட்டு திட்டத்தை ஒப்புதல் அளிக்கிறது; ஆர் & டி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு பாலியல் குற்றவாளியைக் கொல்ல விரும்பினார்: கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட இந்திய -ஆரிஜின் வருண் சுரேஷ், அவர் ஒரு பெடோஃபைலைக் கொன்றதால் அது ‘குளிர்ச்சியாக இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார் – டைம்ஸ் ஆப் இந்தியா
    • விமானத்தின் கியர் பெட்டியில் ஒளிந்து ஆப்கனிலிருந்து டெல்லி வந்த சிறுவன்
    • தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.