Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய்க்கு சேரும் கூட்டத்தை சாதாரணமாக கருதக் கூடாது: பெங்களூரு புகழேந்தி
    மாநிலம்

    விஜய்க்கு சேரும் கூட்டத்தை சாதாரணமாக கருதக் கூடாது: பெங்களூரு புகழேந்தி

    adminBy adminSeptember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய்க்கு சேரும் கூட்டத்தை சாதாரணமாக கருதக் கூடாது: பெங்களூரு புகழேந்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுச்சேரி: விஜய்யின் பின்னால் வரும் கூட்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை, பெங்களூரு புகழேந்தி இன்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை கட்சியை முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

    எடப்பாடி என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசுகிறார். ஆர்எஸ்எஸ் கொள்கையை படிக்க ஆரம்பித்த பிறகு எம்ஜிஆர், அண்ணா, பெரியார் யார் என்பதில் அவருக்கு பிரச்சினையாகி உள்ளது. சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துவிட்டார். அவர், நான்கரை ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்திருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது. 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு தெரிந்தது கூட பழனிசாமிக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பெரிய குழப்பம் நிலவுகிறது.

    அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். உடனே மத்திய உள்துறை அமைச்சர் அவரை அழைத்து பொறுமை காக்கும்படி கூறியதை அடுத்து, அவர் தனது வேகத்தை குறைத்துவிட்டார். இந்த ஆபரேஷன் அனைத்தும் டெல்லியில் இருந்து நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சொல்வதைத்தான் அதிமுக தலைவர்கள் கேட்டு நடக்கின்றனர். அது மாற வேண்டும்.

    தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டாம் என்று சொல்லவே அண்ணாமலை, டிடிவி தினகரனை சந்தித்தார். அந்த கூட்டணிக்கு கூப்பிடச் செல்லவில்லை. அண்ணாமலை என்ற பெயருக்குதான் பாஜக ஓடிக்கொண்டிருந்தது. அவர் இல்லை என்பதால் தமிழகத்தில் பாஜக தரைமட்டமாகிவிட்டது. அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி மீது கடும்கோபத்தில் உள்ளார். அது எப்போது வெளிபடும் என்பது யாராலும் சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி ஜோக்கர் போன்று மாறிவிட்டார். தமிழகத்தில் அவரது சுற்றுப்பயணம் வீழ்ச்சியில் தான் முடியும்.

    முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் வேலை எளிதாக மாறிவிட்டது. திமுகவுக்கு, விஜய்யின் தவெகவுடன் தான் போட்டி. அதிமுக நான்காவது இடத்துக்கு சென்றுவிடும். சீமான் மூன்றாவது இடத்துக்கு வந்துவிடுவார். பாஜகவின் வலையத்துக்குள் தான் அதிமுக இருக்கிறது. அதிமுகவை பாஜக கைப்பற்றிவிட்டது.

    அரசியலில் ஆதரவற்றவராக எடப்பாடி பழனிசாமி நிற்கின்றார். தமிழக திமுக ஆட்சி, திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, மாடல் ஆகியவற்றை காத்து, மத்திய அரசை எதிர்த்து நிற்பதாக இருக்கிறது. அதே நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கவில்லை.

    கொடநாடு, ஜெயலலிதா இறப்பு போன்றவைகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத குறைகள் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது. அதனை முதல்வர் சரி செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் சொன்னது போன்று ஜெயலலிதா இறந்தபிறகு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதனை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை. ஆகவே விஜய் இளைஞராக வருகின்றார். அவரது பின்னால் இளைஞர் பட்டாளம் நிற்கிறது. அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விஜய்யின் பின்னால் செல்லும் கூட்டம் ஓட்டுக்காக வந்த கூட்டம். அது மாறாது.

    புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது. எனவே அது தொடர வேண்டும் என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    September 26, 2025
    மாநிலம்

    “தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து

    September 26, 2025
    மாநிலம்

    ‘திருமணம் ஆகாதோருக்கு அனுமதி இல்லை’ – ஓசூர் பூங்கா பேனரால் மக்கள் அதிருப்தி

    September 26, 2025
    மாநிலம்

    குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர்களுக்கு பணிப் பலன்கள் நிறுத்திவைப்பு – அரசின் மெத்தனத்தால் குற்றங்கள் அதிகரிப்பு

    September 26, 2025
    மாநிலம்

    புதுச்சேரி ரேஷனில் தீபாவளிக்கு இலவசமாக மளிகை, சர்க்கரை, எண்ணெய் தர முடிவு

    September 26, 2025
    மாநிலம்

    தி.மலை அண்ணாமலையார் கோயில் உள்ளே, வெளியே கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை!

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    • மாம்பழங்கள் உண்மையில் இரத்த சர்க்கரையை குறைக்கலாம், ஆய்வு அதிர்ச்சியூட்டும் நன்மைகளை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? இந்து அமெரிக்க அறக்கட்டளைத் தலைவர் சஷி தரூரின் ஜிபேவுடன் டயஸ்போராவின் ம silence னம் எச் -1 பி, கட்டண – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜனவரியில் இருந்து 2,417 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக மத்திய அரசு தகவல்
    • “தமிழக மக்கள் விரும்புவது ஆட்சி மாற்றத்தையே!” – ஜி.கே.வாசன் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.