Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, January 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பாதுகாவலர்
    மாநிலம்

    விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பாதுகாவலர்

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பாதுகாவலர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் அவரது பாதுகாவலர் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அனுப்பி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் ‘ஜனநாயகன்’ சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு நடிகர் விஜய் வந்தார்.

    அங்கு திரளான ரசிகர்கள், தொண்டர்கள் சாலையின் இருபுறமும் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு செல்லும்போது திடீரென ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரை காண உள்ளூர் மக்கள், வெளியூர்களிலிருந்து வந்த ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    இந்நிலையில், சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக தாண்டிக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு காரில் நேற்று மதியம் விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலே காத்திருந்தனர். விமான நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தவெக கட்சி நிர்வாகிகள் சிலரை மட்டும் அனுமதித்தனர்.

    இந்நிலையில், விமான நிலையத்தில் காரில் வந்து இறங்கிய விஜய்யை காண ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர். அப்போது காருக்கு அருகே நின்றிருந்த ரசிகர் ஒருவர் கையில் சால்வையுடன் திடீரென விஜய்யை நோக்கி ஓடி வந்தார்.

    விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்றபோது, அந்த நபரை பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) பாய்ந்து சென்று தடுத்தனர். அப்போது, பாதுகாவலர்களில் ஒருவர், அந்த ரசிகரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினார். இதைத்தொடர்ந்து, அந்த ரசிகரை மற்ற பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனிடையே, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்துக்குள் சென்ற விஜய்யிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முண்டியடித்தனர். அவர்களை பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் விசாரித்ததில், விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவர் மதுரையைச் சேர்ந்த ரசிகர் இன்பராஜ் எனத் தெரிய வந்தது. இச்சம்பவம் பற்றி இன்பராஜ் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்துக்கு வரும் விஜய்யை சந்தித்து சால்வை அணிவிப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். விஜய்யை பார்த்ததும் ஓடிச்சென்று சால்வையை அணிவிக்க முயன்றேன்.

    அப்போது பாதுகாவலர்கள் என்னை தடுத்தனர். எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனது தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டது குறித்து அப்போது நான் கவனிக்கவில்லை. விஜய்யின் பாதுகாப்புக்காக அவரது பாதுகாவலர்கள் இப்படி நடந்து கொண்டனர். அதனால் எனக்கு வருத்தம் இல்லை’ என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வயதான பெண்மணி பாதுகாப்பாக ஏறுவதற்கு ரயிலை நிறுத்தும் அன்பான டிரைவர், ஆன்லைனில் இதயங்களை வென்றார்: வீடியோவைப் பாருங்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அட்லாண்டிக்கின் மிகப்பெரிய ரகசியம்: விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக கடலுக்கு அடியில் ஒரு மாபெரும் கண்ணுக்கு தெரியாத கடல் கண்டுபிடிப்பு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மனிஷா ஷர்மாவின் ஊக்கமளிக்கும் மாஸ்டர்செஃப் ஓட்டம்: பார்கின்சனுக்கு எதிரான உதய்பூர் சிறுமியின் போராட்டம், ஆர்வத்திற்காக – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கனடாவில் பஞ்சாபி தொழிலதிபர் சுட்டுக்கொலை: 8 மாதங்களில் 3வது சம்பவம்; எரிந்த வாகனத்தை கண்டுபிடித்த போலீசார் | சண்டிகர் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா முதன்முதலில் மருத்துவ வெளியேற்றத்தை துவக்கியது: நான்கு விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து சீக்கிரம் திரும்பினர்; பணி ஒரு மாதத்திற்கும் மேலாக குறைக்கப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.