Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பாதுகாவலர்
    மாநிலம்

    விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பாதுகாவலர்

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பாதுகாவலர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்ற ரசிகரின் தலையில் அவரது பாதுகாவலர் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அங்கிருந்து அனுப்பி வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் ‘ஜனநாயகன்’ சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு நடிகர் விஜய் வந்தார்.

    அங்கு திரளான ரசிகர்கள், தொண்டர்கள் சாலையின் இருபுறமும் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு செல்லும்போது திடீரென ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரை காண உள்ளூர் மக்கள், வெளியூர்களிலிருந்து வந்த ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    இந்நிலையில், சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக தாண்டிக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு காரில் நேற்று மதியம் விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலே காத்திருந்தனர். விமான நிலையத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தவெக கட்சி நிர்வாகிகள் சிலரை மட்டும் அனுமதித்தனர்.

    இந்நிலையில், விமான நிலையத்தில் காரில் வந்து இறங்கிய விஜய்யை காண ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர். அப்போது காருக்கு அருகே நின்றிருந்த ரசிகர் ஒருவர் கையில் சால்வையுடன் திடீரென விஜய்யை நோக்கி ஓடி வந்தார்.

    விஜய்க்கு சால்வை அணிவிக்க முயன்றபோது, அந்த நபரை பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) பாய்ந்து சென்று தடுத்தனர். அப்போது, பாதுகாவலர்களில் ஒருவர், அந்த ரசிகரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினார். இதைத்தொடர்ந்து, அந்த ரசிகரை மற்ற பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனிடையே, ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்துக்குள் சென்ற விஜய்யிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முண்டியடித்தனர். அவர்களை பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் விசாரித்ததில், விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவர் மதுரையைச் சேர்ந்த ரசிகர் இன்பராஜ் எனத் தெரிய வந்தது. இச்சம்பவம் பற்றி இன்பராஜ் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்துக்கு வரும் விஜய்யை சந்தித்து சால்வை அணிவிப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். விஜய்யை பார்த்ததும் ஓடிச்சென்று சால்வையை அணிவிக்க முயன்றேன்.

    அப்போது பாதுகாவலர்கள் என்னை தடுத்தனர். எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனது தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டது குறித்து அப்போது நான் கவனிக்கவில்லை. விஜய்யின் பாதுகாப்புக்காக அவரது பாதுகாவலர்கள் இப்படி நடந்து கொண்டனர். அதனால் எனக்கு வருத்தம் இல்லை’ என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    July 1, 2025
    மாநிலம்

    போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

    July 1, 2025
    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

    July 1, 2025
    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  
    • சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்
    • 65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.