Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விசாரணை நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்
    மாநிலம்

    விசாரணை நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

    adminBy adminAugust 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விசாரணை நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகம் முழு​வதும் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்​கு​களின் விசாரணையை துரிதப்​படுத்​த​வும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​களில் தனி கவனம் செலுத்​த​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என தமிழ்​நாடு பணிவரன்​முறை அரசு வழக்​கறிஞர்​கள் சங்க நிர்​வாகி​களிடம், அமைச்​சர் எஸ்​.ரகுபதி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

    புதிய குற்​ற​வியல் நடை​முறை சட்​ட​மான பிஎன்​எஸ்​எஸ் 2023-ல் நடை​முறைக்கு வந்​த​பிறகு கடந்த 3 மாதங்​களாக காலி​யாக இருந்த தமிழ்​நாடு குற்ற வழக்கு தொடர்​(வு)த் துறை​யின் இணை இயக்​குநர் பதவிக்கு தமிழக அரசால் நியமிக்​கப்​பட்ட ஆர்​.சேகர்​ துரை பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

    டிஎன்​பிஎஸ்சி மூல​மாக 1996-ம் ஆண்டு உதவி அரசு வழக்​கறிஞ​ராக பணி​யில் சேர்ந்​து, பல்​வேறு சட்​டம் சார்ந்த நிலைகளில் பணிபுரிந்த அவரை தற்​போது தமிழக அரசு இத்​துறை​யின் இணை இயக்​குந​ராக நியமித்​துள்​ளது. இந்​நிலை​யில், இணை இயக்​குநர் சேகர்​துரை​யின் நியமனத்​துக்​கும், குற்ற வழக்கு தொடர்​(வு)த் துறையை மேம்​படுத்​தும் வகை​யில் தமிழக அரசு 40 புதிய உதவி அரசு வழக்​கறிஞர்​கள் பணி​யிடங்​களை உரு​வாக்​கியதற்​கும், நீண்​ட​கால​மாக வழங்​கப்​ப​டா​மல் நிலு​வை​யில் இருந்த பதவி உயர்வை வழங்​கியதற்​கும் நன்றி தெரிவிக்​கும் வகை​யில் டிஎன்​பிஎஸ்சி மூல​மாக குற்​ற​வியல் நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கறிஞர்​களாக பணி​யாற்றி வரும் தமிழ்​நாடு பணிவரன்​முறை அரசு வழக்​கறிஞர்​கள் சங்​கம் சார்​பி்ல் சங்​கத் தலை​வர் ஐடன் ஐசன், செய​லா​ளர் சி.​ராம​சாமி, பொருளாளர் எஸ்​.நந்​தகு​மார், துணைத் தலை​வர்​கள் எஸ்​.ஜூட் ஆஞ்​சலோ, ஜெப ஜீவ​ராஜா, இணைச்​செய​லா​ளர்​கள் சி.கண்​ணன், கே. ஜெய​கார்த்​தி​கா, ஏ.மோகன் உள்​ளிட்​டோர், சட்​டத் துறை அமைச்​ச​ரான எஸ்.ரகுப​தியை சந்​தித்​து, அவருக்​கும், முதல்​வருக்​கும் நன்றி தெரி​வித்​தனர்.

    அப்​போது விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நீண்​ட​கால​மாக நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களின் விசா​ரணை​யைத் துரிதப்​படுத்​த​வும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​களில் தனி கவனம் செலுத்​த​வும், தண்​டனை சதவீதத்தை அதி​கரிக்​க​வும், குற்​ற​வியல் அரசு வழக்​கறிஞர்​களின் பணித்​திறன் மீது கவனம் செலுத்​த​வும் உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சங்க நிர்​வாகி​களிட​மும், புதி​தாக நியமிக்​கப்​பட்​டுள்ள இணை இயக்​குநரிட​மும் அமைச்​சர் வலி​யுறுத்​தி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    September 21, 2025
    மாநிலம்

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேய கல்விமுறையை தொடர்வது வேதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

    September 21, 2025
    மாநிலம்

    அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்
    • ஷூ வடிவம் தோரணை மற்றும் வலியை எவ்வாறு பாதிக்கிறது: கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க சரியான பாதணிகளைத் தேர்வுசெய்ய ஒரு எளிய வழிகாட்டி – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து
    • மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
    • ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.