Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?
    மாநிலம்

    விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

    adminBy adminJune 30, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்புவனம்: நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யின்​போது மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

    சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்​பவரது நகைகள் திருடு​போய்​விட்​டன. இது தொடர்​பான புகாரின் பேரில் அஜித்​கு​மார் உள்​ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

    பின்​னர், அஜித்​கு​மாரை நேற்று முன்​தினம் விடு​வித்​தனர். வெளியே வந்த அவரை மீண்​டும் மானாமதுரை உட்​கோட்ட தனிப்​படை போலீ​ஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். அப்போது, உடல்​நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக கூறி அஜித்​கு​மாரை மதுரை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்​கு கொண்டு சென்​றுள்​ளனர். அவரை பரிசோ​தித்த டாக்​டர்​கள், அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். பின்​னர், பிரேதப் பரிசோதனைக்​காக அஜித்​கு​மாரின் உடலை மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு போலீ​ஸார் கொண்டு சென்​றனர்.

    இந்த விவ​காரம் தொடர்​பாக திருப்​புவனம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை மேற்​கொண்​டனர். இதற்​கிடை​யில், மானாமதுரை உட்​கோட்ட தனிப்​படையைச் சேர்ந்த காவலர்​கள் பிரபு, கண்​ணன், சங்​கரமணி​கண்​டன், ராஜா, ஆனந்த், ராமச்​சந்​திரன் ஆகிய 6 பேரை பணி​யிடை நீக்​கம் செய்து காவல் கண்​காணிப்​பாளர் ஆஷிஷ் ராவத் உத்​தர​விட்​டார். மேலும், சம்​பவம் தொடர்​பாக திருப்​புவனம் மாவட்ட உரிமை​யியல் மற்​றும் குற்​ற​வியல் நடு​வர் வெங்​கடேஷ் பிர​சாத் நேற்று விசா​ரணை நடத்​தி​னார்.

    இந்​நிலை​யில், பிரேதப் பரிசோதனை செய்​வதற்கு அஜித்​கு​மாரின் உறவினர்​கள் எதிர்ப்​பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அஜித்​கு​மாரை கொன்ற காவலர்​களை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும், குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என அவர்​கள் வலி​யுறுத்​தினர்.

    அப்​போது, அஜித்​கு​மாரின் தாயார் மால​தி, சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை திமுக பிர​முகர் ஒரு​வரது காரில் ஏற்​றி, உடலை வாங்குவதற்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல முற்​பட்​டனர். இதற்கு எதிர்ப்​பு தெரி​வித்து கிராம மக்​கள் மற்​றும் அதி​முக எம்​எல்ஏ செந்​தில்​நாதன் தலை​மையி​லான கட்​சி​யினர் மறியலில் ஈடு​பட்​டனர்.

    அவர்​களை சமா​தானப்​படுத்​திய போலீ​ஸார், அஜித்​கு​மாரின் தாயார், சகோ​தரரை காவல் துறை காரில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்​துச் சென்​றனர். வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டு, அஜித்​கு​மார் உடல் குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

    தலை​வர்​கள் கண்​டனம்: மடப்​புரத்​தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்​பவத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

    மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: காவல் துறையை கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்க வேண்​டிய முதல்​வர் கண்​டும் காணா​மல் இருப்ப​தால் அப்​பாவி மக்​கள் உயி​ரிழக்​கின்​றனர். மடப்​புரம் சம்​பவத்​துக்கு முதல்​வர் என்ன சொல்​லப் போகிறார்?

    அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: ஒரு​வர் தவறு செய்​த​தாக காவல் துறை கரு​தி​னால், கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஒப்​படைத்​து, உரிய சட்ட நெறி​முறையைப் பின்​பற்ற வேண்​டும். சட்​டத்தை கைகளில் எடுத்​துக்​கொள்​ளக் கூடாது. தனது நேரடிக் கட்​டுப்​பாட்​டில் உள்ள காவல் துறையைக்​கூட நிர்​வகிக்​கத் தெரி​யாத முதல்​வருக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​துக் கொள்​கிறேன். மாவட்ட நீதிபதி தலைமையி​லான குழு விசா​ரணை நடத்​தி, உயி​ரிழப்​புக்​குக் காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இறந்​தவர் குடும்​பத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திமுக ஆட்​சி​யில் காவல் நிலை​யத்​துக்கு வரு​வோரின் உயிர்​களுக்​கு பாது​காப்பு இல்​லாத நிலை உரு​வாகி​யுள்​ளது. காவல் துறை​யின் அராஜக போக்​குக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்.

    பாமக தலை​வர் அன்​புமணி ராம​தாஸ்: சாத்​தான்​குளம் படு​கொலை​போல, மடப்​புரம் சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. இதற்​காக காவல் துறை​யும், முதல்​வரும் தலைகுனிய வேண்​டும். இச்​சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று முதல்​வர் பதவி விலக வேண்​டும்.

    தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: பாலியல் குற்​றங்​களில் ஈடு​படும், போதைப் பொருட்​கள் விற்​பனை செய்​யும்

    திமுக​வினர் யாரும் காவல் துறை​யால் தாக்​கப்​படு​வ​தில்​லை. சிறிய குற்​றங்​களில் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​படும் அப்​பாவி​களைக் காவல் துறை கடுமை​யாகத் தாக்​கு​வது அதி​கரித்​துள்​ளது. 2022-ம் ஆண்​டிலிருந்து 23 பேர் காவல் துறை விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​துள்​ளனர். ஆனால், முதல்​வர் எந்​தக் கவலை​யுமின்றி இருக்​கிறார்.

    இதே​போல, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாதக தலைமை ஒருங்கிணைப்​பாளர் சீமான், தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த் உள்​ளிட்​டோரும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மத்திய கைலாஷ் பகுதியில் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் கார் இருப்பதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்: எ.வ.வேலு கருத்து

    July 27, 2025
    மாநிலம்

    கங்​கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை

    July 27, 2025
    மாநிலம்

    மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரிடம் தமிழக அரசு அழுத்தம்

    July 27, 2025
    மாநிலம்

    இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி | கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழா

    July 27, 2025
    மாநிலம்

    மின்சார துறையைப் பற்றி அமைச்சர் சிவங்கருக்கு எதுவும் தெரியாது: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்

    July 27, 2025
    மாநிலம்

    தண்டவாளம் குறைபாடு, உபகரணம் செயலிழப்புடன் மனித தவறுகளே ரயில் விபத்துக்கு காரணம்: ரயில்வே அமைச்சர்

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்தை இயக்க பேச்சுவார்த்தை: உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்
    • மத்திய கைலாஷ் பகுதியில் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் கார் இருப்பதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்: எ.வ.வேலு கருத்து
    • கொழுப்பு கல்லீரலை மாற்றியமைக்க உதவும் 3 சிறந்த தினசரி பழக்கவழக்கங்களை மருத்துவர் பரிந்துரைக்கிறார், மேலும் உடலை நச்சுத்தன்மையடையச் செய்கிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • கங்​கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை
    • இந்தியா – இங்கிலாந்து வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்: ஜவுளித் தொழில்துறையினர் நம்பிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.