Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    adminBy adminSeptember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை உள்பட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (செப்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் பட்சத்தில், அது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செப்.27-ம் தேதி காலை நேரம் கரையை கடக்கக்கூடும்.

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (செப்.26-ம் தேதி) முதல் அக்.1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் நாளை (செப்.26-ம் தேதி) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (செப்.27-ம் தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.26-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை (செப்.26-ம் தேதி) முதல் செப்.28-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் 6 செ.மீ மழை, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி, மயிலாடுதுறையில் தலா 4 செ.மீ மழை, கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, பேச்சிப்பாறை, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்து வருவாய் துறையினர் போராட்டம்

    September 25, 2025
    மாநிலம்

    கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

    September 25, 2025
    மாநிலம்

    புதுச்சேரி: கல்லூரி பேருந்தில் இருந்து விழுந்த மாணவன் பலி; தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக போராட்டம்

    September 25, 2025
    மாநிலம்

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்களை நியமித்தார் ஜெ.பி. நட்டா

    September 25, 2025
    மாநிலம்

    பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்.6-ம் தேதி சென்னை வருகை: நயினார் நாகேந்திரன் தகவல்

    September 25, 2025
    மாநிலம்

    பக்கத்து மாவட்டத்தில் ‘பவர்’ காட்டுவது இருக்கட்டும்… சொந்த மாவட்டம் சொத்தை ஆகிடாம பாருங்க விஜயபாஸ்கர்!

    September 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பணிகளை புறக்கணித்து வருவாய் துறையினர் போராட்டம்
    • இந்த இரண்டு ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும் இளம் இந்தியர்களில் மாரடைப்பு அபாயத்தை உயர்த்துகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 48 மணிநேரம் கொடுமைப்படுத்துதல், கைவிலங்குகளில் ஜார்ஜியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது: சீக்கிய பாட்டி பிபி ஹர்ஜித் கவுர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்; குடும்பம், வழக்கறிஞருக்கு தகவல் இல்லை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கணித மேதை ராமானுஜன் கையெழுத்துப் படிகள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டது: அமைச்சர் பிடிஆர் தகவல்
    • வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை: முகமது யூனுஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.