Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளை (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.18) பெரும்பாலான இடங்களிலும், செப்.19-ம் தேதி ஒரு சில இடங்களிலும், செப்.20 முதல் செப்.22-ம் தேதி வரை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், செப்.23-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் நாளை (செப்.18-ம் தேதி) நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என மொத்தம் 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் (செப்.19-ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் செப்.20-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ மழை, சென்னை மணலி புதுநகரில் 13 செ.மீ மழை, குருவாடியில் 10 செ.மீ மழை, சென்னை எண்ணூர், கொரட்டூர், பாரி முனையில் தலா 9 செ.மீ மழை, சென்னை டிஜிபி அலுவலகம், கத்திவாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் தலா 8 செ.மீ மழை, சேலம் மாவட்டம் கங்கவல்லி, சென்னை அயப்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து!

    September 17, 2025
    மாநிலம்

    கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்

    September 17, 2025
    மாநிலம்

    ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு

    September 17, 2025
    மாநிலம்

    ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மாதம்பட்டி ரங்கராஜ்!

    September 17, 2025
    மாநிலம்

    சென்னை – செய்யாறு இடையே ஆறுவழிச் சாலை: நிலங்களை கையகப்படுத்தும் ஆரம்பகட்ட பணிகள் தீவிரம்

    September 17, 2025
    மாநிலம்

    ‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் 10 குந்துகைகள் மற்றும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி: எது சிறந்தது?
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக உறுதியாக ஆதரிக்கிறது: அமித் ஷா
    • நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து!
    • 7 உணவுகள் சிறந்த ஊட்டச்சத்துக்காக பாலாக் உடன் இணைவதைத் தவிர்க்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.