Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் (நாளை, நாளை மறுநாள்) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் செப்.4, 5 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.6,7 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியஸும் இருக்கக்கூடும்.

    ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று அதிகாலை அதே பகுதிகளில் ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவியது. அது, இன்று காலை 8.30 மணி அளவில், வடக்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டிருந்தது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடக்கும் என கூறப்படுகிறது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

    இதுபோல,ஆந்திரா கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு, தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் முதலான அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு

    September 3, 2025
    மாநிலம்

    விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

    September 3, 2025
    மாநிலம்

    சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!

    September 3, 2025
    மாநிலம்

    மருந்து நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

    September 3, 2025
    மாநிலம்

    கடத்தூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    September 3, 2025
    மாநிலம்

    சுற்றுலா திட்டம் செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு தகவல்

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வைட்டமின் மின் எண்ணெய் உங்கள் முடி வளர்ச்சி, உச்சந்தலையில் ஆரோக்கியம் மற்றும் பிரகாசிக்க உதவுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் அவரை இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இர்விங் உணவகத்தில் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் முதலான அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு
    • 5 இருதயநோய் நிபுணர்கள் தங்கள் இதயங்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தங்களை பின்பற்றும் அன்றாட பழக்கங்கள்
    • ‘இந்தியாவிலிருந்து மக்களுக்கான விசாக்கள் போன்ற எதுவும் இல்லை’: தொழில்முனைவோர் இனவெறி பதவிக்கான மாகா வர்ணனையாளரை வெடித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.