Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
    மாநிலம்

    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி / விருதுநகர்: வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

    மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

    சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீவிர பக்தராக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளங்குகிறார். ஆனால், அவர் இருக்கும் இடம் சரியானதாக இல்லை. அதனால்தான் முருக பக்தர்கள் மாநாட்டை ‘சங்கிகள் மாநாடு’ என்று அவர் விமர்சனம் செய்து வருகிறார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்திருக்க வேண்டும். அப்போதுதான் யார் அந்த சார்? என்பதற்கான விடை கிடைத்திருக்கும். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே தவறானது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரத்தநாடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இந்த அனைத்து வழக்குகளும் 157 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளதா? அனைத்து வழக்குகள் மீதும் தமிழக முதல்வர் அக்கறை காட்டினால் நன்றாக இருந்திருக்கும்.

    உங்கள் தாய்மொழி எது என்று ஸ்பெயின் நாட்டில் எம்.பி. கனிமொழியிடம் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவின் தேசிய மொழி குறித்து சரியான பதிலை கனிமொழி கூறியிருக்கிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சிறப்பானது. தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அழைத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. இதுபோன்று கட்சிகளை அழைப்பது வழக்கமான ஒன்றுதான்.

    வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முதலில் திருமங்கலம் பார்முலா என்று கூறினர். தற்போது பென்னாகரம் பார்முலா என்று கூறுகின்றனர். பெட்டி பெட்டியாக பணம் கொடுக்க ஆளுங்கட்சி தயாராகி வருவதாக, தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். முதலில் ஆயிரம் ரூபாய் தந்தார்கள். தற்போது ஐந்தாயிரம் ரூபாய் தருவதற்கு தயாராகி வருகிறார்கள். பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. பாமக எங்கள் கூட்டணியில் தொடரும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

    September 12, 2025
    மாநிலம்

    பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?

    September 12, 2025
    மாநிலம்

    திமுக முப்பெரும் விழா தேர்தல் திருப்புமுனையாக இருக்கும்: அமைச்சர் கே.என்.நேரு

    September 12, 2025
    மாநிலம்

    பெட்ரோல் டேங்க்கை அகற்றாமல் சாலை அமைத்ததால் சர்ச்சை – இது நாகர்கோவில் ‘சம்பவம்’

    September 12, 2025
    மாநிலம்

    அன்புமணி நீக்கம் பாமகவின் உட்கட்சி பிரச்சினை: நயினார் நாகேந்திரன்

    September 11, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்
    • எந்த 10 உருப்படிகள் நீங்கள் தினமும் தொடும் மிக மோசமானவை என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள்; கை கழுவுதல் என்பது உங்கள் சிறந்த பாதுகாப்பு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பழனிசாமியிடம் முறையீடு: திமுக ஆட்சி மீது திண்டுக்கல் வர்த்தகர்கள் அதிருப்தி ஏன்?
    • எலோன் மஸ்க் Vs லாரி எலிசன்: உலகின் பணக்காரர் யார்? முதல் 5 பில்லியனர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டனர்
    • நானோ வாழை AI வைரஸ் போக்கு: ஜெமினியின் புதிய AI அம்சம் என்ன 3D புள்ளிவிவரங்களை உருவாக்குகிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.