Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 4, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திரு​வள்​ளூரில் 7 ஆண்​டு​களாக வழிப்​பறி கொள்​ளை​யரை கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்​டிக்கு ரூ. 4 லட்​சம் இழப்​பீ​டாக வழங்க தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்​தி, இது​போன்ற வழக்​கு​களில் இழப்​பீட்​டுத்​தொகையை அதி​கரித்து வழங்​கு​வது தொடர்​பாக தமிழக அரசும் அரசாணை​யில் திருத்​தம் மேற்​கொள்ள வேண்​டுமென அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

    திரு​வள்​ளூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (68) கடந்த 2018-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி தனது கணவர் பழனி​யுடன் மருத்​துவ பரிசோதனைக்​காக சாலை​யில் நடந்து சென்​றுள்​ளார். அப்​போது அவர்​களை அழைத்த ஒரு கும்​பல், இப்​பகு​தி​யில் வழிப்​பறி திருடர்​கள் இருப்​ப​தால் அணிந்​துள்ள தாலிச்​செ​யின், வளை​யல், மோதிரம் உள்​ளி்ட்ட நகைகளை பத்​திர​மாக கழட்டி பேக்​கில் வைத்​துக்​கொள்​ளுங்​கள் என அறி​வுரை கூறி​யுள்​ளனர். அவர்​களை மாறு​வேடத்​தில் இருக்​கும் போலீ​ஸார் என நினைத்த கிருஷ்ணவேணி தனது 17.5 பவுன் நகைகளை கழட்டி பேக்​கில் வைத்த மறுநிமிடம் மற்​றொரு கும்​பல் அந்த நகைகளை கொள்​ளை​யடித்து தப்​பியது.

    அதையடுத்து இந்த வழக்​கில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்து தனது நகைகளை மீட்க உத்​தர​விடக்​கோரி கிருஷ்ணவேணி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்தி முன்​பாக நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் தட்​சிணா​மூர்த்​தி, இந்த வழக்​கில் போலீ​ஸார் கடந்த 7 ஆண்​டு​களாக குற்​ற​வாளி​களை கண்​டு​பிடித்து நகைகளை மீட்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இறுதி அறிக்​கை​யும் தாக்​கல் செய்​ய​வில்​லை, என குற்​றம் சாட்​டி​னார்.

    திரு​வள்​ளூர் டவுன் போலீ​ஸார் தரப்​பில் ஆஜரான குற்​ற​வியல் வழக்​கறிஞர் சி.இ.பிர​தாப், ‘‘இந்த வழக்​கின் குற்​ற​வாளி​கள் யார் என இது​நாள் வரை அடை​யாளம் காண​முடிய​வில்லை என்​ப​தால் குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிக்க முடிய​வில்லை எனக்​கூறி திரு​வள்​ளூர் குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. ஒரு​வேளை குற்​ற​வாளி​கள் யார் என பின்​னர் தெரிய​வந்​தால் இந்த வழக்கு மீண்​டும் விசா​ரிக்​கப்​படும், என்​றார்.

    அதையடுத்து நீதிபதி டி. பரத சக்​ர​வர்த்தி பிறப்​பித்​துள்ள உத்​தர​வி்ல் கூறி​யிருப்​ப​தாவது: மூத்த குடிமக்​களை குறி​வைத்து இதுபோன்ற திருட்​டு, கொள்ளை சம்​பவங்​கள் கொஞ்​சம்​கூட ஈவு, இரக்​கமற்ற, மனசாட்​சி​யற்ற நபர்​கள் மூல​மாக அடிக்​கடி நடத்தப்​படு​கின்​றன. இந்த வழக்​கில் வயதான தம்​ப​தி​யின் கவனத்தை திசை​திருப்பி 17.5 பவுன் நகைகளை வழிப்​பறி செய்துள்ளனர். ஆனால் கடந்த 7 ஆண்​டு​களாக குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிக்க முடிய​வில்லை என போலீ​ஸார் கூறு​வது அதிருப்தி​யளிக்​கிறது. போலீ​ஸாரின் இந்த நடவடிக்கை மனு​தா​ரருக்கு துயரத்​தைத்​தான் அதி​கரிக்​கும்.

    இது​போல நகை, பணம் போன்​றவற்றை பறி​கொடுக்​கும் வயதான முதி​ய​வர்​கள் பொருளா​தார ரீதி​யாக மட்​டுமின்​றி, மனதளவிலும் கடுமை​யான பாதிப்​பு​களை சந்​தித்து நோய்​வாய்​படு​கின்​றனர். நூறு ரூபாயை இழந்​தா​லும் அவர்​களால் தாங்​கிக்​கொள்ள முடி​யாது. அந்த பாதிப்பு முது​மையை விட கொடுமை​யானது.

    அவர்​கள் இடத்​தில் இருந்து அவர்​களின் வலியை நாம் உணர்ந்து செயல்பட வேண்​டும். உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இது​போன்ற குற்ற வழக்​கு​களி்ல் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு அதி​க பட்​ச​மாக ரூ. 1 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​கும் வகை​யில் தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த இழப்​பீட்​டுத்​தொகை கடந்த 12 ஆண்​டு​களுக்கு முன்​பாக நிர்​ண​யிக்​கப்​பட்ட ஒன்று.

    அதே​நேரம் இது​போன்ற சம்​பவங்​களில் குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிக்க முடிய​வில்லை எனக்​கூறும்​போது தற்​போதுள்ள சந்தை மதிப்​பின் அடிப்​படை​யில் நகை மற்​றும் பணம் போன்​றவற்றை பறி​கொடுத்​தவர்​களுக்கு 30 சதவீதம் அல்​லது ரூ. 5 லட்​சம் இதில் எது குறை​வாக உள்​ளதோ அதை இழப்​பீட்​டுத்​தொகை​யாக வழங்க வேண்​டும்.

    மனு​தா​ரர் பறி​கொடுத்த 17.5 பவுன் தங்க நகை​களின் தற்​போதைய மதிப்பு ரூ. 13.12 லட்​ச​மாக இருப்​ப​தால் அதில் 30 சதவீத​மான ரூ. 4 லட்​சத்தை மனு​தா​ரருக்கு 12 வார காலத்​துக்​குள், முடிந்த வரை உடனடி​யாக இழப்​பீ​டாக வழங்க வேண்​டும். இந்த தொகையை பெற்​றுக்​கொடுக்​கும் வகை​யில் திரு​வள்​ளூர் மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு தன்​னார்​வலர் ஒரு​வரை நியமித்து மனுதாரரிடம் விண்​ணப்​பம் பெற்று அந்த தொகையை வழங்க வேண்​டும்.

    ஒரு​வேளை மனு​தா​ரரின் நகை திரும்ப கிடைத்​து​விட்​டால் இந்த இழப்​பீட்​டுத் தொகையை அவர் திருப்பி செலுத்த வேண்​டும். இந்த சிறிய தொகை மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட இழப்பை ஈடு செய்​யக்​கூடிய​தாக இருக்​காது என்​றாலும், அவர்​களுக்கு மனதள​வில் ஏற்​பட்ட காயங்​களுக்கு மருந்​தாக​வும், சில​நேரங்​களில் வாழ்​வா​தா​ரத்​துக்​கான ஆறு​தலாக​வும் இருக்​கும்.

    இந்த சமூகம் நம்மை கவனித்​துக்​கொள்​கிறது என்ற நம்​பி்க்​கை​யும் அவர்​களுக்கு கிடைக்​கும். எனவே இது​போன்ற வழக்​கு​களில் பாதிக்​கப்​படும் முதி​ய​வர்​களுக்கு இழப்​பீட்​டுத்​தொகையை அதி​கரித்து வழங்​கும் வகை​யில் தமிழக அரசும் பாதிக்​கப்​பட்​டோருக்கான இழப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் அரசாணை​யில் தேவை​யான திருத்​தங்​களை மேற்​கொண்டு தகுந்த உத்​தர​வு​களை பிறப்​பிக்க வேண்​டும், என உத்​தரவி்ட்​டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

    September 5, 2025
    மாநிலம்

    ‘தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு நான்…’ – ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின் உரை

    September 5, 2025
    மாநிலம்

    பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழச் செய்வதுதான் சமூக நீதியா? – தலைவர்கள் கண்டனம்

    September 5, 2025
    மாநிலம்

    “கச்சத்தீவை திரும்ப பெறுவது சரிவராது!” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

    September 5, 2025
    மாநிலம்

    முன்னாள் பெண் அமைச்சரை தொந்தரவு செய்தோர் மீது நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர்

    September 5, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு
    • ‘தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு நான்…’ – ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின் உரை
    • பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழச் செய்வதுதான் சமூக நீதியா? – தலைவர்கள் கண்டனம்
    • “கச்சத்தீவை திரும்ப பெறுவது சரிவராது!” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
    • ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.