Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்
    மாநிலம்

    வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்

    adminBy adminJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வறுமையை ஒழிப்​ப​தில் இதர மாநிலங்​களுக்கு எப்​போதும் தமிழகம் முன்​னோடி​யாக திகழ்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

    இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் கடுமை​யான உழைப்பு காரண​மாக வறுமை ஒழிப்​பில் தமிழகம் இந்​தி​யா​வில் முதல் இடம் என்​னும் அணி​கலனைச் சூடி​யுள்​ளது. இதில், திமுக அரசு தொடங்​கிய 1967-ம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பை முன்​னிலை​யில் வைத்து மேற்​கொள்​ளப்​பட்ட நடவடிக்​கை​களின் வரலாறும் அடங்​கி​யுள்​ளது.

    1974-ம் ஆண்டு ஜன.28-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரி​வித்து முன்​னாள் முதல்​வர் மறைந்த கருணாநிதி ஆற்​றிய உரை​யில், குடியரசு நாள் விழா கூட கொண்​டாட முடி​யாத நிலை​யில் உள்ள குஜ​ராத் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்களுக்கு உணவு வழங்கி வரு​கிறோம் என்று குறிப்​பிட்​டார்.

    தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆட்​சிப் பொறுப்​பேற்​றபோது, கரோனா பாதிப்பு இருந்த நிலை​யில் பொது​விநி​யோகத் திட்​டம் மூலம் அனை​வருக்​கும் தடை​யின்றி உணவுப் பொருட்​கள் வழங்க உத்​தர​விட்​டார்.

    அதன்​படி 2022-ல் 2 கோடியே 7 லட்​சத்து 70,726 அரிசி குடும்ப அட்​டை​தா​ரருக்​கு, 14 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய கரோனா நிவாரணத் தொகுப்பு வழங்​கப்​பட்​டது. 2 கோடியே 8 லட்​சத்து 42,716 அரிசி அட்​டை​தா​ரர்​களுக்கு ரூ.4,000 வீதம் கரோனா நிவாரண உதவித்​தொகை 2 தவணை​களாக வழங்​கப்​பட்​டன.

    தமிழகத்​தில் 37,328 நியாய​விலைக் கடைகள் செயல்​படு​கின்​றன. இவற்​றின் மூலம் 2 கோடியே 25 லட்​சத்து 93,654 மின்​னணு குடும்ப அட்​டைகளுக்கு உணவுப் பொருட்​கள் வழங்​கப்​படு​கின்​றன. தரம் மற்​றும் பராமரிப்​புக்​காக 10,149 நியாய விலைக் கடைகளுக்​கும், பாது​காப்​பான உணவுச் சங்​கிலி மற்​றும் சேமிப்​புக்​காக 2,059 நியாய விலைக் கடைகளுக்​கும் ஐஎஸ்ஓ சான்​றிதழ் பெறப்பட்டுள்ளன.

    மேலும் 2,394 புதிய நியாய​விலைக் கடைகளை முதல்​வர் திறந்து வைத்​துள்​ளார். இது​வரை 10,661 நியாய விலைக்கடைகளில் யுபிஐ முறையைப் பயன்​படுத்தி ரொக்​கமில்​லாப் பணப்​பரிவர்த்​தனை நடை​பெறும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

    மிக்​ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகை​யாக ஒரு குடும்​பத்​துக்கு ரூ.6,000 வீதம் சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திருவள்ளூர் ஆகிய மாவட்​டங்​களில் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்ட 24 லட்​சத்து 78,229 குடும்​பங்​களுக்​கும் தூத்​துக்​குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதி​க​னமழை​யால் பாதிக்​கப்​பட்ட 6 லட்​சத்து 36,760 குடும்​பங்​களுக்கு தலா ரூ.6,000 வீத​மும் தூத்துக்​குடி, திருநெல்வேலி மாவட்​டங்​களில் உள்ள இதர வட்​டங்​களி​லும் தென்​காசி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களி​லும் கனமழையால் பாதிக்கப்​பட்ட 14 லட்​சத்து 58,164 குடும்​பங்​களுக்​குத் தலா ரூ.1,000 வீத​மும் நிவாரணத் தொகை வழங்​கப்​பட்​டது.

    விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர் மாவட்​டங்​களின் பல்​வேறு பகு​தி​களில் ஃபெஞ்​சல் புய​லால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு 5 கிலோ அரிசி பை, 1 கிலோ பருப்​பு, 1 கிலோ சர்க்​கரை ஆகியவை 7 லட்​சம் குடும்​பங்​களுக்கு வழங்​கப்​பட்​டன.

    நடப்​பாண்டு ஒரு கிலோ பச்​சரிசி, ஒரு கிலோ சர்க்​கரை மற்​றும் ஒரு முழு கரும்பு அடங்​கிய பொங்​கல் பரிசுத் தொகுப்பு 1 கோடியே 94 லட்​சத்து 35,771 அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும், இலங்​கைத் தமிழர் மறு​வாழ்வு மு​காம்​களில் வசிக்​கும் குடும்​பங்​களுக்​கும் நியாய​விலைக் கடைகள்​ மூலம்​ வழங்​கப்​பட்​டன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு 

    July 28, 2025
    மாநிலம்

    புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜூலை 30-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடு: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    July 28, 2025
    மாநிலம்

    தவெக நிகழ்ச்சிகளில் விஜய்யை தவிர வேறு படங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை; பட்டாசு வெடிக்க தடை

    July 28, 2025
    மாநிலம்

    ஊட்டி கர்நாடக அரசு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘நடன மங்கை’ ஆர்கிட் மலர்கள்

    July 28, 2025
    மாநிலம்

    சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

    July 28, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆக.2 வரை மழைக்கு வாய்ப்பு

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்
    • தினமும் வெறும் 5 நிமிடங்கள் இதைச் செய்வது இதயத்தை பாதுகாக்க முடியும்! இங்கே எப்படி – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிக்கிமின் சோ லா போர்க்களம் சுற்றுலா தலமாகிறது
    • உலகக் கோப்பை செஸ் போட்டி: ஹம்பி-திவ்யா மீண்டும் டிரா
    • காசாவிலிருந்து துருக்கி தப்பி சென்று மறுமணம் செய்து கொண்ட ஹமாஸ் முன்னாள் தலைவர் சின்வரின் மனைவி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.