Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வன்னியர் சங்க விழா: மே 11ல் கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
    மாநிலம்

    வன்னியர் சங்க விழா: மே 11ல் கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வன்னியர் சங்க விழா: மே 11ல் கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வழியாக வாகனங்களில் தொண்டர்கள் சென்றபோது, கலவரம் வெடித்தது. பாமகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். வீடுகள், வாகனங்கள் மற்றும் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பாமக மற்றும் விசிகவினர் மீது பல வழக்குகள் பதிவாகின.

    பாமகவினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரத்தில் போராட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாசை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதனால் விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உட்பட மாநிலம் முழுவதும் தொடர் கலவரம் மூண்டது. அரசு மற்றும் தனியார் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாமகவினர் மீது மாநிலம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின.

    இதன் எதிரொலியாக, வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு தமிழக காவல்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் முதற்கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 95 கி.மீ., தொலைவுக்கு பாமக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல், வாகனங்களில் செல்பவர்கள் முழக்கமிடக்கூடாது, ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, வாகனங்களில் செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது, பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாமல்லபுரத்தில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க முழுநிலவு பெருவிழாவுக்கு பல்வேறு வாகனங்களில், அக்கட்சியினர் சென்றனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இரண்டு சமூக மக்களிடையே கலவரம் ஏற்பட்டது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தில் இருந்து தாளங்காடு வரை 39 கி.மீ., தொலைவு உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம் வழியாக மாமல்லபுரத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாவட்ட காவல்துறையும் அறிவுரை வழங்கி உள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு, உள்ளூர் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாமக தலைமையிடமும் தெரிவித்துள்ளோம். கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கவில்லை. மாறாக, அறிவுரையை வழங்கி உள்ளோம். இதை தவிர்த்து, வேறு எந்த கட்டுபாடுகளையும் காவல்துறையினர் விதிக்கவில்லை” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

    July 1, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: விநாடிக்கு 48,000 கனஅடியாக குறைப்பு

    July 1, 2025
    மாநிலம்

    முதல்வர் வேட்பாளரை அமித் ஷா, பழனிசாமி முடிவு செய்வார்கள்: எல்.முருகன் கருத்து

    July 1, 2025
    மாநிலம்

    விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மூத்த நடிகைகளின் அலமாரிகளால் ஈர்க்கப்பட்ட 5 ரவிக்கை வடிவமைப்புகள்
    • பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா திடீர் உயிரிழப்பு ஏன்? – பிரபல இதய நோய் மருத்துவர் விளக்கம்
    • வாலிபாலில் சென்னை ஐசிஎஃப் அணி வெற்றி!
    • சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்
    • 2024-25 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு: 5 ஆண்டுகளில் இரட்டிப்பானது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.