Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வன்னியர் சங்க விழா: மே 11ல் கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
    மாநிலம்

    வன்னியர் சங்க விழா: மே 11ல் கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

    adminBy adminMay 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வன்னியர் சங்க விழா: மே 11ல் கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வழியாக வாகனங்களில் தொண்டர்கள் சென்றபோது, கலவரம் வெடித்தது. பாமகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். வீடுகள், வாகனங்கள் மற்றும் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பாமக மற்றும் விசிகவினர் மீது பல வழக்குகள் பதிவாகின.

    பாமகவினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து விழுப்புரத்தில் போராட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாசை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இதனால் விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உட்பட மாநிலம் முழுவதும் தொடர் கலவரம் மூண்டது. அரசு மற்றும் தனியார் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாமகவினர் மீது மாநிலம் முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின.

    இதன் எதிரொலியாக, வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு தமிழக காவல்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் முதற்கட்டமாக, கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 95 கி.மீ., தொலைவுக்கு பாமக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல், வாகனங்களில் செல்பவர்கள் முழக்கமிடக்கூடாது, ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, வாகனங்களில் செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது, பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாமல்லபுரத்தில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க முழுநிலவு பெருவிழாவுக்கு பல்வேறு வாகனங்களில், அக்கட்சியினர் சென்றனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இரண்டு சமூக மக்களிடையே கலவரம் ஏற்பட்டது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பத்தில் இருந்து தாளங்காடு வரை 39 கி.மீ., தொலைவு உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம் வழியாக மாமல்லபுரத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த வேண்டாம் என, அம்மாவட்ட காவல்துறையும் அறிவுரை வழங்கி உள்ளது. இது தொடர்பாக ஒவ்வொரு உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு, உள்ளூர் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பாமக தலைமையிடமும் தெரிவித்துள்ளோம். கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கவில்லை. மாறாக, அறிவுரையை வழங்கி உள்ளோம். இதை தவிர்த்து, வேறு எந்த கட்டுபாடுகளையும் காவல்துறையினர் விதிக்கவில்லை” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு

    August 28, 2025
    மாநிலம்

    தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    August 28, 2025
    மாநிலம்

    கையில் இருப்பது மந்திரக்கோலா, மருத்துவக்கோலா? – பிரேமலதாவும் கையில் கரகோல் வைத்திருக்கும் ‘கணக்கு’ என்ன?

    August 28, 2025
    மாநிலம்

    “பாமக அழிவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது!” – காடுவெட்டி குருவின் மகள் காட்டமான நேர்காணல்

    August 28, 2025
    மாநிலம்

    கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக சரிவு

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிள la கோமா அறிகுறிகள்: 6 ஆரம்ப அறிகுறிகள் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது, யார் அதிக ஆபத்தில் உள்ளனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் பற்றி எலோன் மஸ்கின் தைரியமான கூற்று: ‘லாஸ் ஏஞ்சல்ஸை 30 நிமிடங்களில் சிட்னிக்கு பறக்கவும்’ | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    • 5 மருந்துகள் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் மூலம் எடுக்கக்கூடாது
    • ‘ரஷ்யா யுத்தம் செய்ய இந்தியா நிதியுதவி’ – 50% வரி விதிப்பு குறித்து ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.