Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வன்னியர் இடஒதுக்கீடு கோரி 20-ல் விழுப்புரத்தில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீடு கோரி 20-ல் விழுப்புரத்தில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

    adminBy adminJuly 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வன்னியர் இடஒதுக்கீடு கோரி 20-ல் விழுப்புரத்தில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் உழைக்​கும் வர்க்​க​மான வன்​னிய மக்​களுக்கு துரோகம் இழைக்​கும் வரலாற்​றில் சமூக அநீதி அரசாக திமுக அரசு உள்ளது. வன்​னியர்​களுக்கு உள் இட ஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்று உச்​சநீ​தி​மன்​றம் ஆணை​யிட்டு 1200 நாள்​களாகும் நிலை​யில், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை.

    இரண்​டாவ​தாக, வன்​னியர் இட ஒதுக்​கீடு குறித்து பரிந்​துரைக்க தமிழ்​நாடு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​துக்கு வழங்​கப்​பட்ட 30 மாதக்​கெடு நிறைவடைந்து விட்ட நிலை​யில், ஆணை​யத்​திட​மிருந்து அறிக்கை பெறு​வதற்கு பதிலாக காலநீட்​டிப்பு வழங்கி துரோகம் செய்​திருக்​கிறது.

    திமுக அரசின் சமூக அநீ​தியை அம்​பலப்​படுத்​து​வதன் மூல​மாக​வும், ராம​தாஸ் வழி​காட்​டு​தல்​களில் கடந்த காலங்​களில் நடத்தப்பட்​டது போன்ற தீவிர​மான அறப்​போ​ராட்​டங்​களை முன்​னெடுப்​ப​தன் மூல​மாக​வும் தான் வன்னியர்களுக்​கான இட ஒதுக்கீட்டை வென்​றெடுக்க முடி​யும் என்​றும் பாமக கருதுகிறது.

    அதன் தொடக்​க​மாக தான் வன்​னியர் சங்​கம் நிறு​வப்​பட்ட நாளான ஜூலை 20-ம் தேதி, இட ஒதுக்​கீட்​டுக்​காக போராளி​கள் இன்னுயிர் ஈந்த மண்​ணான விழுப்​புரத்​தில் மாபெரும் மக்​கள்​திரள் போராட்​டத்தை நடத்த தீர்​மானித்​திருக்​கிறோம். அந்த வகையில் இப்​போதும் நமக்​கான சமூகநீ​தியை வென்​றெடுக்​க​வும், அதனடிப்​படை​யில் பிற சமூகங்​களுக்​கும் உரிய இட ஒதுக்​கீடு கிடைப்​பதை உறுதி செய்​ய​வும் இந்த போராட்​டம் தான் காரண​மாக அமைய​விருக்​கிறது.

    இதை மனதில் கொண்டு பாமக, வன்​னியர் சங்​கம் உள்​ளிட்ட அதன் இணை மற்​றும் சார்பு அமைப்​பு​களைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்​வாகி​களும், பாட்​டாளி தொண்​டர்​களும் விழுப்​புரம் மண்​ணில் படை திரள்​வோம், திமுக​வின் துரோகத்தை தோலுரித்துகாட்டி நமக்​கான சமூகநீ​தியை வென்​றெடுப்​போம் என்று உங்​களை அழைக்​கிறேன்.

    வன்​னிய மக்​களின் சமூக நீதிக்காக எந்த தியாகத்​தை​யும் செய்​யத் தயா​ராக, பாட்​டாளி சொந்​தங்​களாகிய உங்​களை எதிர்​பார்த்து விழுப்​புரத்​தில் காத்​திருப்​பேன்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: மதுரையில் குவிந்த தொண்டர்கள்!

    July 16, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்: 13 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    July 16, 2025
    மாநிலம்

    வீடுவீடாக கதவை தட்டுவதில் எங்களுக்கு கவுரவ குறைச்சல் இல்லை: பழனிசாமிக்கு திமுக வர்த்தகர் அணி செயலாளர் பதில்

    July 16, 2025
    மாநிலம்

    ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்

    July 16, 2025
    மாநிலம்

    மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை

    July 16, 2025
    மாநிலம்

    கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பூங்கா அமைக்க தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: மதுரையில் குவிந்த தொண்டர்கள்!
    • சவான் 2025: ஷ்ரவனின் போது சத்விக் உணவின் நன்மைகள் மற்றும் உங்கள் உண்ணாவிரத உணவில் என்ன சாப்பிட வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தகவல்!
    • பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்: 13 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
    • அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அடையாளம்: இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.