Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,800 கோடியில் 281 பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
    மாநிலம்

    வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,800 கோடியில் 281 பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    adminBy adminJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,800 கோடியில் 281 பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.6,800 கோடியில் 281 பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், திரு.வி.க. நகர் தொகுதி, பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் மற்றும் புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் கட்டப்பட்டு வரும் சலவைக் கூடம் உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டம் ரூ.1000 கோடி என்று முதல் கட்டத்தில் அறிவிக்கப்பட்டு, 2-ம் கட்டமாக ரூ.2,400 கோடி என்றும், 3-ம் கட்டமாக ரூ.6,800 கோடி செலவில் சுமார் 252 பணிகள் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிறகு, கூடுதலாக மறுபடியும் 29 பணிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், 51 பணிகள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

    பெரம்பூர், சந்திரயோகி சமாதி தெருவில் 600 இருக்கைகள், உணவு கூடம், பார்க்கிங் வசதியோடு கூடிய ரூ.15 கோடி செலவில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடைபெறுகிறது. வியாசர்பாடி, கன்னிகாபுரம் மைதானத்தில் ரூ.11 கோடி செலவில் பாக்சிங் மற்றும் கிரிக்கெட், வாலிபால், உடற்பயிற்சி கூடங்கள் பொருந்திய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து வரும் செப்டம்பர் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்ற அனைத்து பணிகளையும் நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் – முழு விவரம்

    August 27, 2025
    மாநிலம்

    இபிஎஸ் பயணம் வெற்றி பெற மீனாட்சி அம்மன் கோயிலில் செல்லூர் ராஜூ வழிபாடு

    August 26, 2025
    மாநிலம்

    அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    August 26, 2025
    மாநிலம்

    சொத்து வரியை மறு ஆய்வு செய்ய 100 குழுக்கள்: மதுரை மாநகராட்சி நீதிமன்றத்தில் தகவல்

    August 26, 2025
    மாநிலம்

    ஸ்ரீவில்லி. ஆவின் கூட்டுறவு பெயர்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய பால்கோவா கடைகளுக்கு நோட்டீஸ்

    August 26, 2025
    மாநிலம்

    கொல்லம் – மதுரை ரயில்கள் சேவையில் நேர மாற்றம்: பயணிகள் மகிழ்ச்சி

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயர் இரத்த சர்க்கரை கூர்முனைகளை ஏற்படுத்தும் முதல் 5 பழங்கள்
    • தேங்காய் நீர் நன்மைகள்: தேங்காய் நீர் குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு ‘சூப்பர் பானம்’? சிறந்த அமெரிக்க காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் மறைக்கப்பட்ட ஆபத்து: மிகவும் கண்டிப்பான உணவு அட்டவணைகளுக்கு எதிராக நிபுணர் எச்சரிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐ.சி.எம்.ஆர் ஆய்வு இந்திய பெண்களிடையே முதல் இரண்டு புற்றுநோய்களை வெளிப்படுத்துகிறது; முன்கூட்டியே கண்டறிதல் இறப்புகளைத் தடுக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டீன் புற்றுநோய் எச்சரிக்கை: 19 வயதான கழுத்து மற்றும் தோள்பட்டை வலி மறைக்கப்பட்ட கட்டி வெளிப்படுத்தப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.