Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வங்கிக்கடன் மோசடி வழக்கு: விசாரணையை ஓராண்டில் முடிக்க சிபிஐ-க்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    வங்கிக்கடன் மோசடி வழக்கு: விசாரணையை ஓராண்டில் முடிக்க சிபிஐ-க்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வங்கிக்கடன் மோசடி வழக்கு: விசாரணையை ஓராண்டில் முடிக்க சிபிஐ-க்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தொழிலதிபருக்கு எதிரான வங்கிக் கடன் வழக்கு விசாரணையை ஓராண்டில் முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்படாத நிலையில், வெளிநாட்டுக் குடிமகனை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.

    தொழிலதிபர் சிவசங்கரன் இந்தியாவில் ஐடிபிஐ வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றார். அந்த பணத்தை சட்டவிரோதமாக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் உள்ள நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், வங்கியில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மேல் விசாரணையும் நடத்தி வருகிறது. அதன்படி, செஷல்ஸ் நாட்டின் குடிமகனான கார்த்திக் பார்த்திபன் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, கார்த்திக் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று (ஜூன் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வின் குமார், “இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவராக மனுதாரர் சேர்க்கப்படாத நிலையில் வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது,” என வாதிடப்பட்டது.

    அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், “500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. இந்நிலையில், மனுதாரருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்தால் அவர் தப்பிவிடக் கூடும். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர, செஷல்ஸ் நாட்டுடன் இந்தியா எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கூடாது.” என வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படாத நிலையில், அந்நிய நாட்டுக் குடிமகனை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது. அவருக்கு எதிரான வழக்கில் ஓராண்டில் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை முடிவில், மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லை என தெரியவந்தால், அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருந்தால் லுக் அவுட் நோட்டீஸை நிலுவையில் வைத்து, வழக்கை எதிர்கொள்ள செய்ய வேண்டும்.” என்றார்.

    மேலும், மலேசியாவில் நடக்கும் சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்

    August 20, 2025
    மாநிலம்

    ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு

    August 20, 2025
    மாநிலம்

    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு

    August 20, 2025
    மாநிலம்

    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

    August 20, 2025
    மாநிலம்

    எந்த நிதி மோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்த வரலாறு உள்ளதா? – போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்

    August 20, 2025
    மாநிலம்

    75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
    • ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு
    • மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு
    • ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
    • இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.