Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘வக்பு திருத்தச் சட்ட விவகாரத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?’ – விஜய் விவரிப்பு
    மாநிலம்

    ‘வக்பு திருத்தச் சட்ட விவகாரத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?’ – விஜய் விவரிப்பு

    adminBy adminMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘வக்பு திருத்தச் சட்ட விவகாரத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?’ – விஜய் விவரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தார்மிகக் கடமை” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களின் உரிமையில் நேரடியாக தலையிட்டது. இது இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    அந்த வகையில், வக்பு என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்பு சொத்துகள் மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.

    இதன் தொடர்ச்சியாக வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்மனுதாரரின் பதிலுக்குப் பதிலுரையைத் தவெக தாக்கல் செய்துள்ளது. அந்த பதிலுரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியலமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்தச் சட்டம், அடிப்படை உரிமைகள் மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

    வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து பேசிவரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும். வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்துக்கு கடந்து போவதாக இருக்காமல், அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்துக்கான அறைகூவலாக இருக்க வேண்டும்.

    சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாக்க, அதற்கு எதிராக உள்ள இந்த வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களுடன் இணைந்து தவெக உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதேபோன்று இந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தார்மிகக் கடமை” என்று விஜய் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார் – விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்

    July 3, 2025
    மாநிலம்

    அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    July 3, 2025
    மாநிலம்

    காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? – ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

    July 3, 2025
    மாநிலம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்துள்ளேன்: வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் நெகிழ்ச்சி

    July 3, 2025
    மாநிலம்

    வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்?- அன்புமணி

    July 3, 2025
    மாநிலம்

    விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைப்பது ஆபத்தானது: ராமதாஸ்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார் – விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்
    • மிளகுக்கீரை எண்ணெய் Vs ரோஸ்மேரி எண்ணெய்: உடனடி முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
    • இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்
    • “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
    • அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.