சென்னை: முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைத் தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினருடனான சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: “முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் – செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க ஜான் பென்னிகுயிக் அவர்களது புகழ்!” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.