Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்
    மாநிலம்

    ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

    adminBy adminSeptember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி நுழைவதை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது சாதாரண தடையோ அரசியல் சச்சரவோ அல்ல, மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும்.

    இந்த அராஜகத்தில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங் நேரடியாக பங்கேற்றிருப்பதும், யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக கும்பல் ஆட்சி இந்தச் சதியின் பின்னணியில் உள்ளது. மக்களின் ஆதரவு கொண்ட ராகுல் காந்தியின் எழுச்சியை தடுக்க முடியாமல், பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.

    இந்த செயல்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மொத்தமாகச் ஈடுபட்டு, இந்திய ஜனநாயகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுக்கும் நிலை உருவாக்குவது, நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிப்பது மட்டுமல்ல, மக்களிடம் நேரடியாகக் கூறுகிறேன், இது எச்சரிக்கை மணி அல்ல, இது போராட்ட மணி. ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக புரட்சியின் மேடையாக மாறும். மக்களின் எழுச்சியால் பாஜகவின் அடக்குமுறை சிதறி நொறுங்கி, ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.

    மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்தநாத் ஆகியோர் ஜனநாயகத்தை அடக்க முயற்சி செய்தாலும், மக்களின் தீர்ப்பு உங்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் எரியும் நெருப்பாக எழுந்து, உங்களின் பாசிசக் கொடூரங்களை முற்றாக அழித்துவிடும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜய்யின் ‘சனிக்கிழமை’ சுற்றுப் பயண ரகசியம்: தவெக தொண்டர்கள் மனநிலை என்ன?

    September 10, 2025
    மாநிலம்

    ‘அவர் முதலில் வெளியே வரட்டும்’ – விஜய் பிரச்சாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து

    September 10, 2025
    மாநிலம்

    ‘தவெக தொண்டர்கள் மரம் ஏறி நிற்க கூடாது’ – விஜய்யின் திருச்சி பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகள்

    September 10, 2025
    மாநிலம்

    “இயலாமையால் பொறாமை…” – செங்கோட்டையன், தினகரன் மீது ஆர்.பி.உதயகுமார் தாக்கு

    September 10, 2025
    மாநிலம்

    பொள்ளாச்சியில் விவசாய, தொழில் துறை அமைப்புகளுடன் இபிஎஸ் கலந்துரையாடல்

    September 10, 2025
    மாநிலம்

    தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய்யின் ‘சனிக்கிழமை’ சுற்றுப் பயண ரகசியம்: தவெக தொண்டர்கள் மனநிலை என்ன?
    • 5 சுகாதார காரணங்கள் பசில் ஒவ்வொரு நாளும் உங்கள் தட்டில் இருக்க வேண்டும்: செரிமானத்தை ஆதரிக்கவும், இரத்த சர்க்கரையை சமப்படுத்தவும், உற்சாகமாக இருக்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அவர் முதலில் வெளியே வரட்டும்’ – விஜய் பிரச்சாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து
    • ஒரு சிறந்த இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி, இது வீட்டின் மிகவும் ஆபத்தான அறை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம் – மீண்டும் செயல்பட தொடங்கிய காத்மாண்டு விமான நிலையம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.