Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ரூ.40,000 வரை மாற்றுத் திறனாளிகள், திருநங்கையருக்கு தனிநபர் கடன்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஏற்பாடு
    மாநிலம்

    ரூ.40,000 வரை மாற்றுத் திறனாளிகள், திருநங்கையருக்கு தனிநபர் கடன்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஏற்பாடு

    adminBy adminJuly 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரூ.40,000 வரை மாற்றுத் திறனாளிகள், திருநங்கையருக்கு தனிநபர் கடன்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஏற்பாடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.40 ஆயிரம் வரை தனிநபர் கடனுதவி வழங்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்) மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் வகையிலும் தனிநபர் ஒருவருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் 6 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணைசாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு பிணையம் எதுவுமின்றி ரூ.40 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இது 6 சதவீத வட்டி விகிதத்தில் 12 முதல் 24 மாத தவணையில் திரும்பப்பெறும் கடனாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற 18 வயதுக்கு மேற்பட்ட ஊரக பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

    மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது பெற்றோர் அல்லது கணவர் அல்லது மனைவி ஆகியோர் சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினராக இருக்கவேண்டும். திருநங்கையர்கள் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் யுடிஐடி அடையாள அட்டையையும், திருநங்கையர்கள் சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டையையும் பெற்றிருக்க வேண்டும்.

    தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையர்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், அனைத்து மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர், சென்னை வள்ளுவர் கோட்டம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 155 330 என்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார அழைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” – மு.க.ஸ்டாலினை நலம் விசாரித்த பின் வைகோ பேட்டி

    August 1, 2025
    மாநிலம்

    திருவெறும்பூர் அரசுப் பள்ளி மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை தேவை: அன்புமணி

    August 1, 2025
    மாநிலம்

    அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்

    August 1, 2025
    மாநிலம்

    எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: 1, 2-வது நடைமேடை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க முடிவு

    August 1, 2025
    மாநிலம்

    தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்: அமைச்சர் சூசகம்

    August 1, 2025
    மாநிலம்

    கோயில்களின் உண்டியல் காணிக்கை, வாடகை கட்டணம் எங்கே போகிறது? – இந்து முன்னணி மாநிலத் தலைவர் கேள்வி

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • படவேடு ரேணுகாம்பாள் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    • “கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” – மு.க.ஸ்டாலினை நலம் விசாரித்த பின் வைகோ பேட்டி
    • எல்லா மார்பு வலி என்பது மாரடைப்பு என்று அர்த்தமல்ல: அது ஆஞ்சினாவாக இருக்கலாம்; அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் முக்கிய வேறுபாட்டைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரை கைது செய்ய அழுத்தம்: முன்னாள் அதிகாரி தகவல்
    • திருவெறும்பூர் அரசுப் பள்ளி மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை தேவை: அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.