Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ரூ.1,538 கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
    மாநிலம்

    ரூ.1,538 கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

    adminBy adminJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரூ.1,538 கோடியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்து பிறகு, 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.

    முதல்கட்டமாக, 36 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது, மெட்ரோ ரயில் தயாரித்து சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில், ரூ.1,538.35 கோடியில் தலா 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அதே அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது.

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), இணை பொது மேலாளர் பி.தியாகராஜன் (மெட்ரோ ரயில்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு ஆகியவற்றை வழங்குதல் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2027-ம் ஆண்டு ஒப்படைக்கப்படும்.

    அதைத் தொடர்ந்து 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படும். இதில் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் அடங்கும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2027-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2028-ம் ஆண்டு மே வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘விசுவநாதனும் சீனிவாசனும் வழி விடமாட்டேன்றாங்க!’ – புலம்பும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்

    August 5, 2025
    மாநிலம்

    கடலூர், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிகளுக்கு பல் மருத்துவர்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்

    August 5, 2025
    மாநிலம்

    பஸ் ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பம்: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

    August 5, 2025
    மாநிலம்

    ஆண்டிப்பட்டி அரசு விழாவில் எம்.பி.யுடன் மோதல்: எம்எல்ஏவை கண்டித்து சுவரொட்டிகள்!

    August 5, 2025
    மாநிலம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் பாலம் கட்டும் பணி: வாகன ஓட்டிகள் அச்சம்

    August 5, 2025
    மாநிலம்

    ‘நோ’ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் சென்னை – மெரினாவில் போக்குவரத்து நெரிசல்

    August 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘விசுவநாதனும் சீனிவாசனும் வழி விடமாட்டேன்றாங்க!’ – புலம்பும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்
    • எலும்பு ஆரோக்கியம்: எலும்புகளை பலவீனப்படுத்தும் 5 தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு வலுவாக வைத்திருப்பது
    • கடலூர், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிகளுக்கு பல் மருத்துவர்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்
    • பஸ் ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பம்: அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு
    • ஆண்டிப்பட்டி அரசு விழாவில் எம்.பி.யுடன் மோதல்: எம்எல்ஏவை கண்டித்து சுவரொட்டிகள்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.