Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ரூ.100 கோடி இயந்திரங்களை விற்ற சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    ரூ.100 கோடி இயந்திரங்களை விற்ற சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரூ.100 கோடி இயந்திரங்களை விற்ற சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வங்கி கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட ரூ. 100 கோடி மதிப்புள்ள இயந்திரங்களை திருட்டுத்தனமாக விற்ற தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க, சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் என்ற தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 120 கோடியும், மற்ற வங்கிகள், ஸ்ரீநிதி ஃபைனான்ஸ் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களிலும் கோடிக்கணக்கில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த கடன் தொகைக்கு அடமானமாக வைக்கப்பட்டிருந்த ஆலையின் சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள இயந்திரங்களை, கடன் கொடுத்த வங்கிகளுக்கு தெரியாமல், திருட்டுத் தனமாக விற்று, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐக்கு, வங்கி நிர்வாகங்கள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.

    இந்த புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடக்கோரி, ஸ்ரீநிதி ஃபைனான்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், அந்த ஆலை நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் வராக் கடன்களாக அறிவிக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் வங்கி கணக்குகள் மோசடி கணக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதியின்றி சிபிஐ வழக்குப் பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் திரும்பப் பெறப்பட்டு விட்டது. இதன் காரணமாகவே, சிபிஐ தரப்பில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அந்த ஆலை நிர்வாகம் ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட இயந்திரங்களை ஆலை நிர்வாகம் திருட்டுத் தனமாக விற்றுள்ளது. ஆலை நிர்வாகத்தின் இந்த மிகப் பெரிய மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டிய சிபிஐ, எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே, தற்போது தனியார் நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆலைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில், சிபிஐ மூன்று வாரங்களில் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, ஆலைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை

    September 24, 2025
    மாநிலம்

    நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி பெறாது: கடம்பூர் ராஜு ‘லாஜிக்’

    September 24, 2025
    மாநிலம்

    மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் தலைவருக்கு சிலை வைத்து ஏன் துதிபாட வேண்டும்? – உச்ச நீதிமன்றம்

    September 24, 2025
    மாநிலம்

    கோபியில் பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு: செங்கோட்டையன் புறக்கணிப்பு

    September 23, 2025
    மாநிலம்

    ரூ.1.50 கோடி அபராதம்: வருமானவரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் வழக்கு!

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ 
    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்
    • இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை
    • வீட்டிலுள்ள கால் சோளங்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான இயற்கை வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.