Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராயப்பேட்டையில் ரூ.12.37 கோடியில் பல்நோக்கு மையம்: திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
    மாநிலம்

    ராயப்பேட்டையில் ரூ.12.37 கோடியில் பல்நோக்கு மையம்: திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராயப்பேட்டையில் ரூ.12.37 கோடியில் பல்நோக்கு மையம்: திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை ராயப்பேட்டையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமணக் கூடத்துடன் ரூ.12.37 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15.61 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம், 2 புதிய முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அதன்படி ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 15,408 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய புதிய பல்நோக்கு மையம் சென்னை ராயப்பேட்டை பைகிராஃப்ட் சாலையில் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பல்நோக்கு மையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 224 இருக்கைகள் கொண்ட திருமணக்கூடம், உணவருந்தும் இடம், தங்கும் அறைகள், வாகன நிறுத்துமிடம், லிப்ட் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும். திருவல்லிக்கேணி ஜானி பாட்ஷா தெருவில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் விதமாக ரூ.1.87 கோடி செலவில் 4,273 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய புதிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம் அமைக்கப்பட உள்ளது.

    அதேபோல் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள பொது நூலகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.1.37 கோடியில் 2,420 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கூடிய புதிய முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன பொது நூலகம் அமைக்கப்பட இருக்கிறது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள 3 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சேப்பாக்கம் சைடோஜி தெரு மற்றும் டி.பி.கோயில் தெருவில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்புகளையும், ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பணியாளர்களுக்கான 12 குடியிருப்புகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

    இந்நிகழ்வுகளில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் சு.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்

    July 2, 2025
    மாநிலம்

    அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

    July 2, 2025
    மாநிலம்

    கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்

    July 2, 2025
    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

    July 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    July 2, 2025
    மாநிலம்

    ‘நடக்கக் கூடாதது நடந்துவிட்டது…’ – அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்
    • அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?
    • பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது
    • கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்
    • “மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்” – இயக்குநர் ராம் விருப்பம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.