Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்த 159 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் குடியிருப்பு
    மாநிலம்

    ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்த 159 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் குடியிருப்பு

    adminBy adminJuly 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்த 159 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் குடியிருப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்னை ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை, ராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள பால் டிப்போ பகுதியில் தண்டையார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் சதுரஅடி நிலத்தில் 159 குடும்பங்கள் வசித்துவருகின்றன.

    இவர்கள் 75 ஆண்டு களாக மாட்டுக் கொட்டகை அமைத்து பால் வியாபாரம் செய்து இவ்விடத்திலேயே வசித்து வந்தனர். மழை வெள்ளத்தில் பாதிப்பு இந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து 159 குடும்பங்களும் மிகுந்த பாதிப்படைவதால் இவர்களை மறுகுடியமர்வு அமர்த்த வேண்டி இருந்தது.

    கடந்த 2024-ம் ஆண்டு மழைக்காலத்தில், வெள்ள நீரினால் சூழப்பட்ட இந்த பகுதியை பார்வையிட்ட துணை முதல்வர், 159 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க ஏற்பாடு செய்வதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.

    தொடர்ந்து, இந்த 159 குடும்பத் தினருக்கும் மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்ய ஆணை கள் தயார் செய்யப்பட்டன. இந்நிலையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஆர்.மூர்த்தி, வீட்டு வசதித்துறை செயலர் காகர்லா உஷா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வைகோ மீது சாதிய முலாம் பூசுவதா: இளைஞரணி கண்டனம்

    July 19, 2025
    மாநிலம்

    கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழக அரசு விழாவுக்கு கோயில் வளாகத்துக்குள் அனுமதி இல்லை: பிரதமர் பங்கேற்பதால் நடவடிக்கை

    July 19, 2025
    மாநிலம்

    ‘காமராஜரை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற திமுக உளவியல் யுத்தம்’ – வானதி சீனிவாசன் விமர்சனம்

    July 19, 2025
    மாநிலம்

    கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு உடனடியாக செலுத்த வேண்டும்: அன்புமணி

    July 19, 2025
    மாநிலம்

    விஜய்க்கு ‘வலை’, சீமானுக்கும் ‘சிக்னல்’ – இபிஎஸ் நகர்வின் வியூகம் என்ன?

    July 19, 2025
    மாநிலம்

    “திமுக பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட சிபிஎம் தொண்டன் குடிக்கவில்லை” – இபிஎஸ்-க்கு பெ.சண்முகம் பதிலடி

    July 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் பின்தொடர்ந்த பிறகு ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ஜாஸ்மின் வாலியா ஸ்பார்க் பிரேக்அப் வதந்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வைகோ மீது சாதிய முலாம் பூசுவதா: இளைஞரணி கண்டனம்
    • யுகே விசா நன்மைகள்: கூடுதல் விசாக்கள் மற்றும் காகித வேலைகள் இல்லாத இந்த 8 நாடுகளுக்கு பயணம் செய்யுங்கள்
    • நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: ஒருவர் கடத்தல்
    • கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழக அரசு விழாவுக்கு கோயில் வளாகத்துக்குள் அனுமதி இல்லை: பிரதமர் பங்கேற்பதால் நடவடிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.