Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, December 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேர மது விற்பனை – பக்தர்கள், பொது மக்கள் வேதனை
    மாநிலம்

    ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேர மது விற்பனை – பக்தர்கள், பொது மக்கள் வேதனை

    adminBy adminSeptember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேர மது விற்பனை – பக்தர்கள், பொது மக்கள் வேதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: புனித தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாத சுவாமி கோயில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

    நாட்டின் முக்கிய புனிதத் தலங்களில் ராமேசுவரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், இங்கு புனிதத்தை கெடுக்கும் வகையில் மதுக்கடைகள் இயங்கி வந்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ராமேசுவரம் தீவில் இயங்கிவந்த 11 மதுக்கடைகளில் 9 கடைகள் மூடப்பட்டன.

    தற்போது, பாம்பனில் மட்டும் 2 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளையும் அகற்றி, அப்துல் கலாம் பிறந்த ராமேசுவரத்தை மது இல்லாத தீவாக மாற்ற வேண்டும் என்று கோரி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

    இந்நிலையில், பாம்பன் மதுக்கடைகளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து ராமேசுவரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளி்ல் கூடுதல் விலைக்கு சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.50 முதல் ரூ.100 வரை விலை வைத்து விற்கின்றனர்.

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாத சுவாமி கோயில் கிழக்கு நுழைவாயில் அருகேயும் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குடிசைத் தொழில்போல் இதில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இதனால், அதிகாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரை எந்த நேரத்திலும் ராமேசுவரம் பகுதியில் மதுபாட்டில்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருகின்றன.

    இளைஞர்கள், மீனவர்கள் கூடுதல் விலை கொடுத்து மது அருந்தி வருவதால், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இது தவிர, இங்கு மது அருந்துவோர் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், புனிதத் தல தன்மையை ராமேசுவரம் இழந்து வருகிறது.

    எனவே, ராமேசுவரத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக தடுத்து, மீனவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்க போலீஸார், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கைலி ஜென்னரின் ஸ்டெம் செல் சிகிச்சை: கர்ப்பத்திற்குப் பிறகு அவரது நாள்பட்ட முதுகுவலிக்கு அது எவ்வாறு உதவியது என்பதை நடிகர் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சமையலறையில் உள்ள கடற்பாசி ஏன் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும், அதற்கு பதிலாக என்ன பயன்படுத்த வேண்டும் என்பதை விஞ்ஞானி விளக்குகிறார்
    • வலுவான glutes வேண்டுமா? ஷில்பா ஷெட்டியின் சமீபத்திய உடற்பயிற்சி தசை வளர்ச்சிக்கு உதவும், மேலும் உங்கள் முதுகைப் பாதுகாக்கும் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ESA செவ்வாய் கிரகத்தில் பட்டாம்பூச்சி வடிவ பள்ளம், தாக்கம், எரிமலை செயல்பாடு மற்றும் சாத்தியமான நீரை வெளிப்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குழந்தையின் வளர்ச்சி மற்றும் வெற்றியை மாற்றக்கூடிய 7 பகவத் கீதை ஸ்லோகங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.