Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“ராமர் பாலம், சரஸ்வதி நதி குறித்த அறிவியல் சான்று உள்ளதா?” – கீழடி விவகாரத்தில் ஜோதிமணி கேள்வி
    மாநிலம்

    “ராமர் பாலம், சரஸ்வதி நதி குறித்த அறிவியல் சான்று உள்ளதா?” – கீழடி விவகாரத்தில் ஜோதிமணி கேள்வி

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “ராமர் பாலம், சரஸ்வதி நதி குறித்த அறிவியல் சான்று உள்ளதா?” – கீழடி விவகாரத்தில் ஜோதிமணி கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்டுக்கல்: “ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்று சான்று உள்ளதா? இவர்கள் அரசியல் காரணங்களுக்காக வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழுக்கு இருக்கும் தொன்மையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: “கீழடியில் எப்பொழுதெல்லாம் நமது தொன்மை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசு, இது சரியில்லை, அது சரியில்லை, அறிவியல் பூர்வ ஆராய்ச்சி இல்லை என்கின்றனர்.

    இரும்பு காலத்தில் தமிழர்கள்தான் முதன்மையானவர்கள் என நிரூபித்துள்ளோம். கீழடி ஆராய்ச்சி துவக்கத்தில் நமது தொன்மைக்கு சான்று கிடைக்கும்போது, அமர்நாத்ராமகிருஷ்ணன் இடம்மாற்றம் செய்யப்பட்டார். ஆராய்ச்சிக்கான நிதி நிறுத்தப்பட்டது. தற்போது அறிக்கையை மாற்றி எழுத சொல்கிறார்கள். உண்மையை மாற்ற முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

    ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்றுச் சான்று உள்ளதா? இவர்கள் அரசியல் காரணங்களுக்காக வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், தமிழுக்கு இருக்கும் தொன்மையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு வேண்டும். தமிழ் மொழியோ, தமிழ் இனமோ உலகின் தொன்மையானது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இதில் இருந்து தமிழர்களின் மனநிலைக்கு எதிரான மனநிலையை கொண்டது பாஜக என்பது நிரூபணமாகிறது. இதுதான் கீழடி விவகாரத்தில் எதிரொலிக்கிறது.

    மத்திய அரசு ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தமிழ் இனம், மொழி தொன்மையானதுதான். அவர்களிடம் நாம் ஒன்றும் சான்றிதழ் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. இந்தியாவில் ஓர் இனம் உலகின் தொன்மையானது என்று சொல்லும்போது இந்தியர்கள் அனைவரும் கொண்டாடவேண்டும். தமிழ் இனமோ, மொழியோ இந்தியாவுடைய ஓர் அம்சம் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கேட்டால் நம்மை பிரிவினைவாதி என்கின்றனர்.

    தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலைதர இரண்டு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஒதுக்கவேண்டும். ஆனால் இந்த ஆண்டு 67 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இதில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த ஆண்டுக்கான நிலுவை தொகை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, காங்கிரஸ் கொண்டுவந்த திட்டம் என்பதால் இந்த திட்டத்தை முடக்கப் பார்க்கின்றனர்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்!

    September 14, 2025
    மாநிலம்

    இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    ஆவடி பேருந்து நிலையம் இடமாற்றம்

    September 14, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    September 14, 2025
    மாநிலம்

    இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 

    September 14, 2025
    மாநிலம்

    சிம்பொனிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன்: தமிழக அரசு பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கம்

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெலங்கானாவில் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் தலைவர் சுஜாதக்கா சரண்
    • உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்
    • சாய் பல்லவியின் இந்திப் படத் தலைப்பு மாற்றம்
    • விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்!
    • எச்.ஐ.வி முன்னேற்றம்: சக்திவாய்ந்த ஆன்டிபாடிகளின் கண்டுபிடிப்பு சிகிச்சைக்கான புதிய நம்பிக்கையைத் தூண்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.