Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராமநாதபுரத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்
    மாநிலம்

    ராமநாதபுரத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமநாதபுரத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமநாதபுரம்: ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று ராமநாதபுரத்தில் மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எல்லை தாண்டி மீன்பிடித்தாக படகுகளை பறிமுதல் செய்து, மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அமைச்சர்களிடம் பேசி தீர்வு காண்பதற்கான முயற்சிகளை செய்வேன்.

    விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் தொடக்க வேளாண்மை வழங்கப்பட்ட பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சியான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.540 கோடி காப்பீடு தொகை அதிமுக ஆட்சியில் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டன.

    ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் காவேரி – குண்டாறு திட்டத்தை அதிமுக ஆட்சியில் மேற்கொண்டோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். தற்போது மேட்டூர் அணை நிரம்பி 1 லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக கடலில் வீணாக போய் கலக்கின்றது.

    காவேரி – குண்டாறு திட்டம் இருந்திருந்தால் கடலில் உபரி நீராக கலக்கும் தண்ணீர், ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களை நிரப்பியிருக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் காவேரி – குண்டாறு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

    சேலம் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் 1050 ஏக்கரில் கால்நடை பூங்கா அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டம் முடியும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தை மட்டும் நான் திறந்து வைத்தேன். இதில் கலப்பின ஆடு, மாடுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் முடக்கப்பட்டது.

    நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சியில் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 2019-ல் புதிய ஜவுளிக் கொள்கை கொண்டுவரப்பட்டது. பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது. ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து போய் மூடும் நிலையில் உள்ளது.

    நாட்டுப் படகு மீனவர்கள் தங்கள் தொழில் சார்ந்து ஏற்படுகின்ற இன்னல்களை தெரிவித்துள்ளார்கள். அவை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சரி செய்து தரப்படும். மீனவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது வலைகளுக்கும், சேதமடைந்த படகுகளுக்கும் மானியம் வழங்கப்பட்டது. விவசாயிகள் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டபோது, சேதத்தை கணக்கிட்டு நிவாரண தொகையை உடனடியாக அதிமுக அரசாங்கம் வழங்கியது.

    16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக அரசு, கச்சத்தீவு இல்லாத காரணத்தினால் தமிழக மீனவர்கள் பாதிக்கின்றார்கள் என்று தெரிந்திருந்தும், கச்சத்தீவை மீட்பதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. கச்சத்தீவை மீட்க அதிமுக சார்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் – அரசுக்கு வருவாய் இழப்பு 

    August 1, 2025
    மாநிலம்

    சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அருகே குப்பையால் துர்நாற்றம்: முகம் சுளிக்கும் பயணிகள்

    August 1, 2025
    மாநிலம்

    “கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” – மு.க.ஸ்டாலினை நலம் விசாரித்த பின் வைகோ பேட்டி

    August 1, 2025
    மாநிலம்

    திருவெறும்பூர் அரசுப் பள்ளி மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை தேவை: அன்புமணி

    August 1, 2025
    மாநிலம்

    அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்

    August 1, 2025
    மாநிலம்

    எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: 1, 2-வது நடைமேடை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க முடிவு

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிக பாரம் ஏற்றும் வாகனங்களால் ஆபத்து: பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகள் – அரசுக்கு வருவாய் இழப்பு 
    • குடும்பத்துடன் தென்னிந்தியாவுக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? 7 கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • லோகேஷ் கனகராஜுக்கு புகழாரம் சூட்டியுள்ள அனிருத்
    • சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அருகே குப்பையால் துர்நாற்றம்: முகம் சுளிக்கும் பயணிகள்
    • பித்தப்பை அகற்றுதல்: அறுவைசிகிச்சை, பக்க விளைவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.