Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்
    மாநிலம்

    ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்

    adminBy adminJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமதாஸ் மீது திடீர் பாசமா? – அன்புமணிக்கு திருமாவளவன் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என்ற பாமக தலைவர் அன்புமணியின் கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவால் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை கட்சிகள் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பத் திரும்ப தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தைச் சொல்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மவுனம் காக்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தேன். தற்போது, அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லி இருக்கும் பதில் பாஜகவுக்குத்தான் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிமுகவை எந்தக் கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தைச் சொல்லும் அவர், யார் கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    பாஜக – அதிமுக இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் விசிக அதிமுகவில் சேரும் என்பது யூகம்தான். அப்படி ஒருநிலை வரும்போது பதில் சொல்கிறேன்.

    திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாரை தற்காலிகப் பணிநீக்கம் செய்தது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களைத் தர வேண்டும். தமிழகத்தில் காவல் நிலைய இறப்பு நிகழக் கூடாது.

    திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது திடீரென என்ன பாசம் என அன்புமணி கேட்கிறார். பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. தந்தை – மகன் இடையே இடைவெளி பெரிதாகி விடக் கூடாது என்ற அடிப்படையில் சொன்ன பொறுப்பான வார்த்தை. தந்தைக்கு இருக்கும் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பாமக இங்கே எளிய மக்களுக்காகப் போராடும் கட்சி என நம்புவதால் அவர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படக் கூடாது. இதை சனாதன சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்” என்று திருமாவளவன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

    July 1, 2025
    மாநிலம்

    ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    June 30, 2025
    மாநிலம்

    செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி!

    June 30, 2025
    மாநிலம்

    சிறு வணிகர்களுக்கான மின் கட்டண சலுகைகள் என்னென்ன? – தமிழக அரசு அறிவிப்பு

    June 30, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து விசிக தான் வலுவான கட்சி!” – திருமாவளவன்

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா
    • சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்
    • ஜப்பானின் ‘தற்கொலை காடு’ பலவீனமான இதயமுள்ளவர்களுக்கு அல்ல-5 முதுகெலும்பு குளிர்ச்சியான உண்மைகள்
    • ‘அஜித்குமார் மரணத்துக்கு காரணமானோரை கைது செய்யாதது ஏன்?’ – தமிழக பாஜக சரமாரி கேள்வி
    • ரயில் கட்டண உயர்வு, தட்கல் டிக்கெட், ஆதார் – பான் இணைப்பு: ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.