Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதா? – விசாரணை கோரும் கே.பாலு
    மாநிலம்

    ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதா? – விசாரணை கோரும் கே.பாலு

    adminBy adminJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதா? – விசாரணை கோரும் கே.பாலு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    ராமதாஸ் தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர். அவரது இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்பு குறைபாடு நிலவுவதைத் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் அவரை நேசிக்கும் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போக்கப்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில் உண்மை என்ன? ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எந்த நோக்கத்திற்காக அந்தக் கருவி பொருத்தப்பட்டது? என்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாட்டாளிகளுக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

    எனவே, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்; ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டது உண்மை என தெரிய வந்தால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

    September 16, 2025
    மாநிலம்

    நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது திமுகவில்தான்: உதயநிதி பெருமிதம்

    September 16, 2025
    மாநிலம்

    ‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை

    September 16, 2025
    மாநிலம்

    வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் சொல்வதை மக்களே ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கருத்து

    September 16, 2025
    மாநிலம்

    “3-ம் இடத்துக்கு சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் போட்டி” – அமைச்சர் ஐ.பெரியசாமி

    September 15, 2025
    மாநிலம்

    விஜய் காட்டிய ‘மாஸ்’… அதிர்வுகளை உணர்த்தும் எதிர்வினைகள் – ஒரு பார்வை

    September 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
    • வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
    • நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் முதல்முறையாக இளைஞரணி உருவாக்கப்பட்டது திமுகவில்தான்: உதயநிதி பெருமிதம்
    • ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்
    • ‘பாஜக நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை’ – இபிஎஸ் வெளிப்படை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.