Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, December 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராஜேந்திர பாலாஜியை சமாளிக்க சாதியைத் தீட்டுகிறாரா மாஃபா பாண்டியராஜன்?
    மாநிலம்

    ராஜேந்திர பாலாஜியை சமாளிக்க சாதியைத் தீட்டுகிறாரா மாஃபா பாண்டியராஜன்?

    adminBy adminJuly 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராஜேந்திர பாலாஜியை சமாளிக்க சாதியைத் தீட்டுகிறாரா மாஃபா பாண்டியராஜன்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை அரசியலில் இருந்து மீண்டும் விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின்முறை மாநாட்டில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், “நாடார் சமுதாய மக்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதால் அரசியலில் நாடார் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது” என டச்சிங்காக பேசி இருப்பது ராஜேந்திர பாலாஜி வட்டாரத்தை திகிலுக்குள் தள்ளி இருக்கிறது.

    ஜெயலலிதா அமைச்​சர​வை​யில் அவரது நம்​பிக்​கைக்​குரிய அமைச்​சர்​களில் ஒரு​வ​ராக இருந்​தவர் மாஃபா பாண்​டிய​ராஜன். 2016-ல் ஆவடி​யில் போட்​டி​யிட்டு அமைச்​ச​ரான இவர், 2021-ல் மீண்​டும் அதே தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோற்​றுப் போனார். இதையடுத்து சென்​னையை விட்​டு​விட்டு தனது சொந்த மாவட்​ட​மான விருதுநகர் மாவட்ட அரசி​யலுக்கு திரும்​பி​னார். இங்கு வந்​ததுமே உள்​ளாட்​சித் தேர்​தலில் விருதுநகர் நகர்​மன்ற தேர்​தலில் களப்​பணி​யில் இறங்​கி​னார். ஆனால், ராஜேந்​திர பாலாஜிக்கு பயந்து பெரும்​பாலான அதி​முக நிர்​வாகி​கள் பாண்​டிய​ராஜனை பார்த்​தாலே பயந்து ஓடி​னார்​கள்.

    உட்​கட்​சிக்​குள் இப்​படி​யான குடைச்​சல்​கள் இருந்​தா​லும் 2024 மக்​களவை தேர்​தலில் விருதுநகரில் போட்​டி​யிட விரும்​பி​னார் பாண்​டிய​ராஜன். ஆனால், சமயம் பார்த்து தொகு​தியை தேமு​தி​க-வுக்கு தள்​ளி​விட்​டார் ராஜேந்​திர பாலாஜி. இதையடுத்​து, 2026 சட்​டமன்​றத் தேர்​தலில் விருதுநகரில் போட்​டி​யிடலாம் என பாண்​டிய​ராஜனுக்கு சமா​தானம் சொன்​னது அதி​முக தலை​மை.

    இதையடுத்து சுறுசுறுப்​பான பாண்​டிய​ராஜன், கட்சி நிர்​வாகி​களைச் சந்​தித்​தல், கட்சி நிகழ்ச்​சிகள் மற்​றும் விழாக்​களில் பங்​கெடுத்​தல் என உற்​சாக​மா​னார். விருதுநகர் மாவட்ட அரசி​யலில் மீண்​டும் பாண்​டிய​ராஜன் தலை தூக்​கு​வது தனது தலை​மைக்கு சிக்​கலாகலாம் என கணக்​குப் போட்ட ராஜேந்​திர பாலாஜி, பாண்​டிய​ராஜனை பொது​வெளி​யிலேயே எதிர்க்க ஆரம்​பித்​தார். கடந்த மார்ச் மாதம் விருதுநகரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பாண்​டிய​ராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற அதி​முக நிர்​வாகியை மேடை​யிலேயே தாக்​கி​னார் பாலாஜி. அத்​துடன், சிவ​காசி​யில் நடந்த கூட்​டத்​தில் பாண்​டிய​ராஜனை பெயர் குறிப்​பி​டா​மல் ஒரு​மை​யில் விலாசி​னார்.

    ராஜேந்​திர பாலாஜி ராஜ​பாளை​யம், சிவ​காசி என தொகு​தி​கள் மாறி மாறி போட்​டி​யிட்​டாலும் நாடார் சமு​தாய வாக்​கு​களே அவரது வெற்றி தோல்​வியை தீர்​மானிக்​கும் சக்​தி​களாக உள்​ளன. இதைப் புரிந்து கொண்டு தான் தற்​போது தனது நாடார் சமு​தா​யத்​தைக் கையிலெடுத்​திருக்​கி​றார் பாண்​டிய​ராஜன். இது அவருக்​கான இடத்தை உறு​தி​செய்​வதுடன், ராஜேந்​திர பாலாஜி​யின் இருப்​பை​யும் தீர்​மானிக்​கும் என்​கி​றார்​கள்.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய நாடார் சமூகத்​தைச் சேர்ந்த அதி​முக நிர்​வாகி​கள், “அதி​முக-​வில் இப்​போது அமைப்பு ரீதி​யாக 82 மாவட்​டங்​கள் உள்​ளன. இதில், நாடார் சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள் மூவர் மட்​டுமே மாவட்​டச் செய​லா​ளர்​களாக இருக்​கி​றார்​கள். நாடார் சமூகத்​துக்கு இப்​போது 13 எம்​எல்​ஏ-க்​கள் இருக்​கி​றார்​கள். இதில் அதி​முக காரர் ஒரு​வர் மட்​டுமே. அவரும் இப்​போது ஓபிஎஸ் அணி​யில் இருக்​கி​றார். இதையெல்​லாம் மனதில் வைத்​துத்​தான் நாடார் மகாஜன சங்க பொதுக்​கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யிடம், நாடார் சமு​தா​யத்​துக்கு கூடு​தலாக மாவட்​டச் செய​லா​ளர் பொறுப்​பு​களை வழங்க வேண்​டும். எம்​எல்ஏ சீட்​களை​யும் கூடு​தலாக ஒதுக்க வேண்​டும் என கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

    இப்​படி இருக்​கை​யில், நாடார் சமு​தா​யத்​தைச் சேர்ந்த மாஃபா பாண்​டிய​ராஜனை, ராஜேந்​திர பாலாஜி கடுமை​யாக எதிர்த்து வரு​வது எங்​கள் சமு​தாய மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிருப்​தியை உண்​டாக்கி வரு​கிறது. இதைப் புரிந்து கொண்ட ராஜேந்​திர பாலாஜி, அந்த அதிருப்​தி​களை எல்​லாம் பலவாறு சமாளித்து வரு​கி​றார். பாண்​டிய​ராஜனை விமர்​சித்த விவ​காரத்​தில் தனக்கு எதி​ராக சில அமைப்​பு​கள் அடித்த போஸ்​டர்​களைக்​கூட ஒட்​ட​வி​டா​மல் தடுத்​து​விட்​டார் பாலாஜி.

    ஏனென்​றால், நாடார் சமூகத்​தைப் பகைத்​துக் கொண்​டால் தனது அரசி​யல் எதிர்​காலமே கேள்விக்​குறி​யாகி​விடும் என்​பது அவருக்​குத் தெரி​யும். இது தெரிந்து தான், விருதுநகரில் நடந்த நாடார் உறவின்​முறை ஒருங்​கிணைப்பு மாநாட்​டில் பேசிய பாண்​டிய​ராஜன், நாடார் சமூக மக்​களின் உணர்​வு​களை தட்டி எழுப்​பும் வித​மாகப் பேசி இருக்​கி​றார். வெளிப்​படை​யாக காட்​டிக்​கொள்ளாவிட்​டாலும் பாண்​டிய​ராஜனின் இந்த மூவ் பாலாஜி வட்​டாரத்தை கலவர​மாக்​கித்​தான் வைத்​திருக்​கிறது” என்​றார்​கள்.

    இதுகுறித்து மாஃபா பாண்​டிய​ராஜனிடம் பேசினோம். “நா​டார் சமு​தாய மக்​கள் அதி​கம் உள்ள இடங்​களுக்​குச் சென்று அந்த சமூகத்​துக்கு அதி​முக செய்த நன்​மை​களை எடுத்​துக் கூறி ஆதரவு திரட்​டும்​படி பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உத்​தர​விட்​டுள்​ளார். அதன் அடிப்​படை​யிலேயே சமு​தா​யம் சார்ந்த நிகழ்​வு​களில் கலந்து கொண்டு வரு​கிறேன். அந்த வகை​யிலேயே, நாடார் சமு​தாய மக்​கள் தங்​களுக்கு ஆதர​வான கட்​சிக்கு ஒரு​மித்து வாக்​களிக்க வேண்​டும் எனக் கூறினேன்” என்​றார் அவர்.

    மாவட்ட அளவில் மைனாரிட்டி சமூகத்​தவ​ரான ராஜேந்​திர பாலாஜியை வழிக்​குக் கொண்​டுவர மெஜாரிட்டி சமூகத்​தைச் சேர்ந்த மாஃபா பாண்​டிய​ராஜன் எடுத்​திருக்​கும் சாதி ஆயுதம் எந்​தளவுக்கு சாதகம் செய்​கிறதென்று பார்​க்​கலாம்!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஊறுகாய் காய்கறிகள் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும்! மறைக்கப்பட்ட ஆபத்துகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது பற்றி அறிவியல் என்ன சொல்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வேகவைத்த வெர்சஸ். வறுத்த வெர்சஸ். வேகவைத்த ப்ரோக்கோலி: உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கிறிஸ்துமஸ்/புத்தாண்டு காலத்தில் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க 8 டயட் ஹேக்குகள்
    • தூங்கும் நேரத்தில் குழந்தை கேரட் TikTok இல் பிரபலமாக உள்ளது, ஆனால் அவை உண்மையில் உங்களுக்கு வேகமாக தூங்க உதவுகின்றனவா; போக்குக்கு பின்னால் உள்ள உண்மை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவில் உள்ள 8 சின்னச் சின்ன வனவிலங்கு காப்பகங்கள், இங்கு புலி நட்சத்திரம் இல்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.