Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

    adminBy adminJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஜூலை 16-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஜூலை 16-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ராசிபுரம் நகராட்சியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    ராசிபுரம் நகராட்சியில் தற்போதுள்ள பேருந்து நிலையம் போதிய வசதியுடன் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை தேவையில்லாமல் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணைப்பாளையம் என்ற கிராமத்துக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி வாழ் மக்களுக்கு நாள்தோறும் முறையாக குடிநீர் வழங்காத, ஆதாய நோக்கத்துக்காக பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முயற்சி மேற்கொள்ளும் திமுக அரசு மற்றும் நகர மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் வரும் ஜூலை 16-ம் தேதி காலை 10 மணிக்கு ராசிபுரம் பஸ் நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நடைபெறும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உலக பாரம்பரிய சின்னமானது செஞ்சி கோட்டை: பாரிஸில் நடந்த யுனெஸ்கோ கூட்டத்தில் அறிவிப்பு

    July 13, 2025
    மாநிலம்

    தமிழகம் முழுவதும் ஜூலை 18 வரை மழைக்கு வாய்ப்பு

    July 13, 2025
    மாநிலம்

    திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை: அதிமுக குற்றச்சாட்டு

    July 12, 2025
    மாநிலம்

    “மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவதாக மிரட்டி திமுக உறுப்பினர்கள் சேர்ப்பு” – இபிஎஸ் குற்றச்சாட்டு

    July 12, 2025
    மாநிலம்

    சென்னை, புறநகரில் 2-வது நாளாக பலத்த காற்றுடன் மழை!

    July 12, 2025
    மாநிலம்

    ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர்

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்த உத்தரவு
    • அட்லி படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன்!
    • உலக பாரம்பரிய சின்னமானது செஞ்சி கோட்டை: பாரிஸில் நடந்த யுனெஸ்கோ கூட்டத்தில் அறிவிப்பு
    • அகமதாபாத் விமான விபத்து: எரிபொருள் சப்ளை நின்றதே விபத்துக்கு காரணம் – முதல்கட்ட அறிக்கை கூறுவது என்ன?
    • ‘லகான்’ இயக்குநர் இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.