
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்தினாரா என்ற சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பதை மக்கள் தெளிவுப்படுத்துவார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் நடத்தியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் எஸ்ஐஆருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

