Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவர் – மீட்கும் முயற்சி தொடருவதாக துரை வைகோ தகவல்
    மாநிலம்

    ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவர் – மீட்கும் முயற்சி தொடருவதாக துரை வைகோ தகவல்

    adminBy adminAugust 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் மாணவர் – மீட்கும் முயற்சி தொடருவதாக துரை வைகோ தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ரஷ்யாவில் போருக்கு அனுப்பப்பட விருக்கும் தமிழக மாணவரை மீட்க தொடர் முயற்சி எடுத்து வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் அவர், கடந்த 2023-ம் ஆண்டு ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு ஆயுதபயிற்சி, போதை மருந்து போன்றவற்றை கொடுத்து போருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் மனரீதியாக பெரும் துயரில் இருப்பதாக கிஷோர் கூறியுள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் போருக்கு அனுப்பப்படலாம். அப்படி அனுப்பினால் நாம் அவரை இழக்க நேரிடும்.

    இதுகுறித்து நாடாளுமன்றத்தில் முதலில் ஒலித்தது மதிமுகவின் குரல் தான். தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், செயலரை ஆகியோரிடம் பேசினேன். இந்திய ரஷ்ய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, போருக்கு கிஷோரை அனுப்பக் கூடாது என வலியுறுத்தியிருப்பதாகவும், 126 பேரில் பலரை மீட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறைச் செயலர் தெரிவித்தார்.

    இதுகுறித்த கடிதத்தில் 68 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களும், தங்களது மாநிலத்திலும் சிலர் ரஷியாவில் சிக்கியிருப்பதாக தெரிவித்தனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி 126 இந்தியர்களை ரஷ்ய அரசு போருக்கு தயார்படுத்தியுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேரை காணவில்லை.

    இவ்வாறு அங்கு செல்வோரை அந்நாட்டு குடிமகன் என்பதற்கான ஆவணங்களையும் ரஷ்ய அரசு உருவாக்கியுள்ளது. இதுபோன்ற செயல்களை தீவிரவாத அமைப்புகள் செய்யக் கூடும். ஆனால், இத்தகைய கீழ்த்தரமான மனிதாபிமானமற்ற செயலை ரஷ்யா என்ற நாடு செய்கிறது.

    இதுகுறித்து மத்திய அரசும் வலியுறுத்தியுள்ளது. அதன் பின்னரும் அவர்கள் அதையே செய்கின்றனர். அங்கு செல்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள சிக்கல்கள் குறித்து தெரிவிக்கும் குடியேறுவோருக்கான சோதனை நடை முறையை (இசிஆர்) ரஷ்யாவுக்கும் அமல்படுத்த வேண்டும்.

    வரும் வாரத்தில் பிரதமரையும் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளேன். அங்கு சிக்கியுள்ள அனைவரையும் மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். சந்திப்பின்போது கிஷோரின் பெற்றோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆடிப்பெருக்கு நாளில் நதிகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

    August 2, 2025
    மாநிலம்

    ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு உயர் நீதிமன்றம் தடை

    August 2, 2025
    மாநிலம்

    திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை. மத்திய சிறையில் கைதியிடம் டிஐஜி வருண்குமார் நேரில் விசாரணை

    August 2, 2025
    மாநிலம்

    கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் அபராத வட்டி, இஎம்ஐ வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

    August 2, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதால் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இருக்காது: திருமாவளவன் நம்பிக்கை

    August 2, 2025
    மாநிலம்

    “என்னை வேவு பார்த்தது என் மகன் அன்புமணி தான்!” – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆடிப்பெருக்கு நாளில் நதிகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
    • ஆப்டிகல் மாயை: இந்த வன மாயையில் மறைக்கப்பட்ட மானைக் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான மனம் மட்டுமே முடியும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை ஆயுள்: பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
    • குழந்தைப் பாடகர் முதல் தேசிய விருது இசையமைப்பாளர் வரை – யார் இந்த ஜி.வி.பிரகாஷ்?
    • ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு உயர் நீதிமன்றம் தடை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.