Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»யோகா – இயற்கை மருத்துவம் சிகிச்சையில் நோயாளியின் கணைய அழற்சி, கட்டி பாதிப்பு குறைந்தது: ஆய்வு முடிவில் தகவல்
    மாநிலம்

    யோகா – இயற்கை மருத்துவம் சிகிச்சையில் நோயாளியின் கணைய அழற்சி, கட்டி பாதிப்பு குறைந்தது: ஆய்வு முடிவில் தகவல்

    adminBy adminJune 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    யோகா – இயற்கை மருத்துவம் சிகிச்சையில் நோயாளியின் கணைய அழற்சி, கட்டி பாதிப்பு குறைந்தது: ஆய்வு முடிவில் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சையில் நோயாளிக்கு கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு படிப்படியாக குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அரசு யோகா இயற்கை மருத்துவ பேராசிரியர் மருத்துவர் ஒய்.தீபா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டனர். இந்திய மருத்துவ முறை ஆய்வாளர்கள் ஏ.விஜய், கே.பத்மாவதி, ஆர்.நித்யஸ்ரீ, மூவேந்தன் ஆகியோர் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சி கட்டுரையில் கூறியிருப்பதாவது:

    கணைய அழற்சி என்பது உடலில் உள்ள கணையத்தில் சேதம் அல்லது வீக்கம் ஏற்படும் நிலையாகும். அந்த பாதிப்பு தொடர்ந்து இருந்தால் கணையத்தால் மேற்கொள்ளப்படும் அகச்சுரப்பி மற்றும் புறச்சுரப்பி பணிகளில் சிக்கல் ஏற்படும். அதேபோல், அழற்சி உள்ளவர்களுக்கு கணையத்தின் வெளிப்பகுதியில் சூடோசிஸ்ட் எனப்படும் நீர்க்கட்டி உருவாகும்.

    உலக அளவில் லட்சத்தில் 163 பேர் வரை கணைய அழற்சி பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதில் நாள்பட்ட கணைய அழற்சிக்கு உள்ளாகும் 40 சதவீதம் பேருக்கும், குறுகியகால அழற்சிக்கு உள்ளாகும் 26 சதவீதம் பேருக்கும் சூடோசிஸ்ட் கட்டிகள் உருவாகின்றன.

    அத்தகைய பாதிப்புடன் 23 வயது பெண் கடந்த சில மாதங்களுக்கு இயற்கை நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர வயிற்றுவலி, மலம் கழித்தலில் பாதிப்பு, கால்களில் எரிச்சல், எடை இழப்பு ஆகிய பாதிப்புகள் இருந்தன. பரிசோதனையில் அவருக்கு தீவிர கணைய அழற்சி மற்றும் பெரிய அளவிலான கட்டி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து, பவனமுக்தாசனா, வக்ராசனா உள்ளிட்ட 7 வகையான ஆசனங்கள், பிராணயாம பயிற்சிகள், அதனுடன் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 20 நாள் சிகிச்சை அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம், அந்த பெண்ணின் கணைய கட்டி பாதிப்பும், அழற்சியும் குறைந்தது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

    இது ஒரு நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு ஆகும். இதனை மேலும் நுட்பமாக அறிய கூடுதல் ஆய்வு தேவைப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு

    July 30, 2025
    மாநிலம்

    நெல்லை ஆணவக் கொலை: பேச்சுவார்த்தை தோல்வி; கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    July 30, 2025
    மாநிலம்

    சவுக்கு சங்கர் மீதான வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 30, 2025
    மாநிலம்

    அமெரிக்காவில் சிகிச்சை: இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 30, 2025
    மாநிலம்

    ஆதாயக் கொலையும் மது போதை கொலையுமாக தமிழ்நாடு இருப்பது வெட்கக்கேடு: ராமதாஸ் கண்டனம்

    July 30, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.72 கோடி சொத்துகளை சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்த ரசிகை
    • சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு
    • லாஃப்டா மெமர் அவரை அம்பலப்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னர், ‘முழு’ உண்மையைச் சொல்லாததால், செல்வாக்கு செலுத்துபவர் பிரதீக் க aus சிக் இறுதியாக மறுபிரவேசம் செய்வதை கைவிடுகிறார்
    • பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல் காந்தி
    • பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.