Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘யார் அந்த சார்’ என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது: நயினார் நாகேந்திரன்
    மாநிலம்

    ‘யார் அந்த சார்’ என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது: நயினார் நாகேந்திரன்

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘யார் அந்த சார்’ என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது: நயினார் நாகேந்திரன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விருதுநகர்: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

    மதுரை திருப்பங்குன்றத்தில் இம்மாதம் 22ம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதையொட்டி, விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் சூலக்கரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “இந்த மாநாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திலிருந்து 20 ஆயிரம் பேரும், மேற்கு மாவட்டத்திலிருந்து 16 ஆயிரம் பேரும் பங்கேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களைவிட விருதுநகர் மாவட்டத்திலிருந்து அதிகமானோர் பங்கேற்பர். விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெறும்.

    படிப்படியாக நமது வெற்றி நெருங்கிக் கொண்டே இருக்கிறது. தேசிய ஜனநாயக ஆட்சி தமிழகத்தில் மலருவதற்கு இந்த மாநாடு முன்னோட்ட மாக அமைய வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக மக்களை நாம் சம்பாதிக்க வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் அரசியல், நமது பண்பாடு, கலாசாரம் பாதுக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

    அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மாநாட்டில் அசம்பாவிதம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அவர் பக்தியான நபர். ஆனால், பக்தி இல்லாத இடத்தில் இருந்து கொண்டு தீய எண்ணங்களுடன் பேசுவது வருந்தத்தக்கது.

    ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பை வரவேற்கிறோம். யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் யார் அந்த சார் என்பதை கண்டுபிடிப்போம் என்று கூறியது வரவேற்கத்தக்கது. தினசரி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. 157 நாளில் விரைவாக இந்த வழக்கை முடிக்க வேண்டிய அவசியம் என்ன? 4 ஆண்டுகளாக நிறைய பாலியல் வழக்குகள் உள்ள நிலையில், ஞானசேகரன் வழக்கில் மட்டும் முதல்வர் ஆர்வம் காட்டியதுதான் சந்தேகம்.

    முதல்வரின் கருத்து எல்லாமே தவறான கருத்து. நீட் தேர்வு விலக்கு வராது என்பது தெரியும். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.தற்போது மீண்டும் தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆளுநர் எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஆளுநருக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மாநில முதல்வருக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுதான் திமுகவின் வேலை” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக – பாஜக கூட்டணிக்கு தவெக வருமா? – ‘நல்லதே நடக்கும்’ என நயினார் நாகேந்திரன் விளக்கம்

    June 28, 2025
    மாநிலம்

    பாமகவுடன் கூட்டணி; ஸ்டாலின் முடிவு செய்தால் ஏற்போம்: ராமதாஸை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை கருத்து

    June 28, 2025
    மாநிலம்

    கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்: டிடிவி.தினகரன் கருத்து

    June 28, 2025
    மாநிலம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இயந்திர யானை ‘கஜா’ – நடிகை திரிஷா வழங்கினார்

    June 28, 2025
    மாநிலம்

    புதுச்சேரியில் பதவிக்காக போட்டி நிலவும் சூழலில் பாஜக அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா – பின்னணி என்ன?

    June 28, 2025
    மாநிலம்

    பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்க விசா பெற சமூக வலைதள விவரம் கட்டாயம்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
    • கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து
    • அதிமுக – பாஜக கூட்டணிக்கு தவெக வருமா? – ‘நல்லதே நடக்கும்’ என நயினார் நாகேந்திரன் விளக்கம்
    • அது வெறும் நெஞ்செரிச்சல் என்று அவளிடம் கூறப்பட்டது -இப்போது அவளுக்கு அரிய மற்றும் ஆக்கிரமிப்பு வயிற்று புற்றுநோயுடன் வாழ 12 மாதங்கள் உள்ளன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.