Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»யாரையும் குறைகூற வரவில்லை; மக்கள் சொன்னதை மத்திய அரசிடம் சொல்வோம்: கரூரில் நிர்மலா சீதாராமன் பேட்டி
    மாநிலம்

    யாரையும் குறைகூற வரவில்லை; மக்கள் சொன்னதை மத்திய அரசிடம் சொல்வோம்: கரூரில் நிர்மலா சீதாராமன் பேட்டி

    adminBy adminSeptember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    யாரையும் குறைகூற வரவில்லை; மக்கள் சொன்னதை மத்திய அரசிடம் சொல்வோம்: கரூரில் நிர்மலா சீதாராமன் பேட்டி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கரூர்: ‘குடிக்க தண்ணீர்கூட கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, பகல் 12 மணி முதல் காத்திருந்தோம். குழந்தைகளுடன் சென்று சிக்கிக்கொண்டோம், வெளியில் கூட வர முடியவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் கூறினார்கள்’ என கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    கரூரில் நேற்று முன் தினம் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சூழலில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தவெக கூட்டம் நடைபெற்ற கரூர் வேலுசாமிபுரத்திற்கும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “உயிரிழந்த சிலரின் குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்தேன். அவர்களின் கதறலைக் கேட்டு ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை. அந்த துக்கத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ஒரு வீட்டுக்கு வாழ்வாதாரமாக இருந்தவர்களே உயிரிழந்துள்ளனர். இதுபோல ஒரு சம்பவம் இனி நம் நாட்டில் எங்கும் நிகழக் கூடாது. காயமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் கூறியதை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் கூறுவேன்.

    மக்களை சந்தித்து ஆறுதல் கூற மட்டுமே வந்துள்ளேன். இந்த சம்பவம் குறித்தோ அல்லது விசாரணை குறித்தோ வேறு எதையும் இப்போது என்னால் சொல்ல முடியாது. சாதாரண அப்பாவி மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டார். இந்த பணம் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    பிரதமர் வர முடியாத சூழலில் என்னையும், மத்திய இணையமைச்சர் எல்.முருகனையும் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டோரிடம் பேசியபோது, எதிர்பார்த்ததை விட கூட்டம் மிக அதிகமாக இருந்தது, பலர் கட்டிடங்கள், மின் கம்பங்கள் மீதிருந்து விழுந்ததாக சொன்னார்கள்.

    குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, பகல் 12 மணி முதல் காத்திருந்தோம். குழந்தைகளுடன் சென்று சிக்கிக்கொண்டோம், வெளியில் கூட வர முடியவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் கூறினார்கள். மக்கள் எங்களிடம் சொன்னதை நாங்கள் மத்திய அரசிடம் சொல்வோம். மத்திய அரசின் சார்பில் வந்துள்ளோம். கட்சி சார்பில் யாரையும் குற்றஞ்சாட்ட, விமர்சிக்க வரவில்லை.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் சம்பவத்தில் வதந்தி: சமூக வலைதளத்தில் பதிவிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு

    September 29, 2025
    மாநிலம்

    பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறல்: புஸ்ஸி ஆனந்த் மீது நாமக்கலில் வழக்குப் பதிவு

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு அமைத்தது பாஜக

    September 29, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

    September 29, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம் தாக்கம் | முதலுதவியை ஒரு பாடமாக வைக்க நிர்மலா சீதாராமனிடம் எஸ்.ஆர்.சேகர் கோரிக்கை

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் சம்பவத்தில் வதந்தி: சமூக வலைதளத்தில் பதிவிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு
    • மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிலை என்ன? – 19 மாதம் கடந்தும் மத்திய அரசு பரிசீலனை!
    • மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி எப்போதும் மாரடைப்பு அல்ல: கார்டியாக் அல்லாத காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அபாயங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறல்: புஸ்ஸி ஆனந்த் மீது நாமக்கலில் வழக்குப் பதிவு
    • ஒரே நாளில் இருமுறை உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.86,000-ஐ கடந்தது!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.