Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»யானை சின்னம் வழக்கு: பகுஜன் சமாஜ் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தவெக பதில் மனு
    மாநிலம்

    யானை சின்னம் வழக்கு: பகுஜன் சமாஜ் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தவெக பதில் மனு

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    யானை சின்னம் வழக்கு: பகுஜன் சமாஜ் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தவெக பதில் மனு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “தவெக கட்சி கொடியில் யானையை பயன்படுத்தப்பட்டுள்ளதை போல உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அனுமதிக்குமா?” என கட்சிக் கொடி தொடர்பான வழக்கில் பகுஜன் சமாஜ் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

    சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், “தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார்.

    அதில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

    தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல. தமிழகத்தின் கலாச்சார, வரலாற்று பெருமைகள் மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவெக கொடி தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை. எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று (ஜூன் 4) சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன் , “எங்களுடைய சின்னமான யானையை தவெக கட்சி கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ளதை போல் உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக அதிமுக போன்ற கட்சிகள் அனுமதிக்குமா? எங்களுடைய தேசிய சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது,” என வாதிட்டார்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இதுகுறித்து விளக்கம் அளிக்க தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜக அரசு மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: செல்வப்பெருந்தகை

    September 12, 2025
    மாநிலம்

    அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

    September 12, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கள்ளச்சாராயம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் திமுக தலைகுனிய வைத்து கொண்டிருக்கிறது: தமிழிசை விமர்சனம்

    September 12, 2025
    மாநிலம்

    தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்

    September 12, 2025
    மாநிலம்

    கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    September 12, 2025
    மாநிலம்

    அன்று அண்ணாமலை… இன்று நயினார் நாகேந்திரன்..! – பழனிசாமி ‘ஸ்டைலில்’ பழிபோடும் தினகரன்!

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாக்கு திருட்டு குறித்து இன்னும் மோசமான ஆதாரத்தை வெளியிடுவேன்: ராகுல் காந்தி உறுதி
    • பாஜக அரசு மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: செல்வப்பெருந்தகை
    • 5 ஆசனங்கள் தூக்கத்திற்கு முன் படுக்கையில் செய்ய | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவராக இன்று பதவியேற்கிறார் சிபிஆர்
    • நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கிக்கு ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் முழு ஆதரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.