Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, October 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ம.பி.யில் குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய தடை
    மாநிலம்

    ம.பி.யில் குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய தடை

    adminBy adminOctober 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ம.பி.யில் குழந்தைகள் இறப்பு: இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது. உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒன்று முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

    இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரத்தில் செயல்படும் சென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரண்டு இருமல் மருந்துகளை அக் குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.

    இதுதொடர்பாக மத்தியப் பிரதேச உணவு, மருந்து கட்டுப்பாட்டுத்துறை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் எஸ்.குருபாரதி வெளியிட்ட அறிக்கை: மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் உள்ளிட்ட 5 மருந்துகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. மற்ற 4 மருந்துகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இல்லை. ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், டை எத்திலீன் கிளைசால் ரசாயனம் இருந்தது கண்டறியப்பட்டது.

    அதனால், மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், அம்மருந்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்துக்கு பிறகு அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரம்

    October 5, 2025
    மாநிலம்

    தாயுமானவர் திட்டத்தில் 2 நாள் ரேஷன் பொருள் விநியோகம்

    October 5, 2025
    மாநிலம்

    அழைப்பிதழ் கொடுக்கவா… கூட்டணிக்கு அழைக்கவா..? – சி.வி.சண்முகம் மூலம் ராமதாஸுக்கு சேதி அனுப்பிய பாஜக!

    October 5, 2025
    மாநிலம்

    பழனிசாமியின் நாமக்கல் பிரச்சாரம் 3-ம் முறையாக ஒத்திவைப்பு: காவல் துறை அனுமதி மறுப்பு

    October 5, 2025
    மாநிலம்

    தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

    October 4, 2025
    மாநிலம்

    உயிரிழந்த நிர்வாகிக்கு பதவி – ஈரோடு மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி!

    October 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசு ஐடிஐ மாணவர்களுக்கு உலகத் தரத்தில் தொழிற்பயிற்சி வழங்க ரூ.60,000 கோடியில் புதிய திட்டம் தொடங்கினார் பிரதமர் மோடி
    • உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரம்
    • சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான சர்ச்சை: விஜய் மல்லையா வழங்கிய தங்கத்தில் செம்பு கலப்பா?
    • மற்றொரு தெலுங்கு படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம்
    • ‘ட்யூட்’ வெளியீடு: தமிழக விநியோகத்தில் மாற்றம்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.