Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மொழி குறித்து கமல் புதிதாக எதுவும் சொல்லவில்லை; கர்நாடகாவில் செயற்கையாக சர்ச்சை உருவாக்கம்: ராம.சீனிவாசன்
    மாநிலம்

    மொழி குறித்து கமல் புதிதாக எதுவும் சொல்லவில்லை; கர்நாடகாவில் செயற்கையாக சர்ச்சை உருவாக்கம்: ராம.சீனிவாசன்

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மொழி குறித்து கமல் புதிதாக எதுவும் சொல்லவில்லை; கர்நாடகாவில் செயற்கையாக சர்ச்சை உருவாக்கம்: ராம.சீனிவாசன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 11 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, அரசின் சாதனை வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான கோட்டப் பொறுப்பாளர்கள் பயிற்சிக் கூட்டம் திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். இளைஞரணி தேசிய பொதுச்செயலாளர் ரோஹித், தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்குப் பிறகு மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர் மாநாட்டில் 5 லட்சம் பேர் ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசம் சொல்ல உள்ளோம். அது கின்னஸ் அல்லது லிம்கா சாதனையாக அமையும். இந்த மாநாட்டில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

    கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் புதிதாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தில் பலர் சொன்ன கருத்தைத் தான் கூறி உள்ளார். அது கர்நாடகாவில் செயற்கையாக சர்ச்சையாக உருவாக்கப்பட்டுள்ளது. தாய் தமிழின் உதிரத்திலிருந்து தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பிறந்ததாக தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதி உள்ளார்.

    எப்போது கன்னடர்கள் அதை ஏற்கவில்லையோ; அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

    கமல்ஹாசன் கூறியது உண்மையா, பொய்யா என்று பார்க்காமல், கன்னடர்கள் தங்கள் மொழியின் அடையாளத்தை, ஆளுமையை தமிழ் அழிக்கிறது என்று எண்ணினால், கமல்ஹாசன் தான் சொன்னக் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இருமாநிலங்களுக்கு இடையே உள்ள நல்ல உறவு, சகோதரத்துவம், நட்பு ஆகியவற்றை கெடுக்க வேண்டாம். கன்னடர்கள் தரப்பிலும் இதை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

    4 திராவிட மொழிகள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சகோதர மொழிகள் தான். சமஸ்கிருதமோ, தமிழோ எது மூத்தது, பிந்தையது என்ற சர்ச்சைக்குள் செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்

    September 12, 2025
    மாநிலம்

    “தமிழக அரசியலில் இதுவரை இல்லாத நிபந்தனைகளை எதிர்கொள்கிறது தவெக” – விஜய் ஆவேசம்

    September 12, 2025
    மாநிலம்

    “100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை சுரண்டுகிறது தமிழக அரசு” – அன்புமணி

    September 12, 2025
    மாநிலம்

    இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதில் ரூ.5 கோடி முறைகேடு: கிருஷ்ணசாமி

    September 12, 2025
    மாநிலம்

    பாஜக அரசு மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: செல்வப்பெருந்தகை

    September 12, 2025
    மாநிலம்

    அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “பிரதமர் மோடி இப்போது மணிப்பூர் செல்வது நல்லது, ஆனால்…” – ராகுல் காந்தி கருத்து
    • மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்
    • ஆண் லிபிடோ மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை தீவிரமாக தீங்கு விளைவிக்கும் மிகவும் பொதுவான விஷயங்கள்
    • டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அறைகளில் சோதனை
    • “தமிழக அரசியலில் இதுவரை இல்லாத நிபந்தனைகளை எதிர்கொள்கிறது தவெக” – விஜய் ஆவேசம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.