Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மேல்பாதி கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எதிர்ப்பு: ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 50 பேர் மீது வன்கொடுமை வழக்கு
    மாநிலம்

    மேல்பாதி கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எதிர்ப்பு: ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 50 பேர் மீது வன்கொடுமை வழக்கு

    adminBy adminApril 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மேல்பாதி கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எதிர்ப்பு: ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 50 பேர் மீது வன்கொடுமை வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    இந்நிலையில், கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கிராமத்தின் ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று வழிபாடு நடத்தவும், கோயிலுக்குள் செல்வோரை தடுக்கும் விதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.

    அதைத்தொடர்ந்து, 22 மாதங்களுக்கு பிறகு, கடந்த 18-ம் தேதி வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு, கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கோயிலுக்குள் நாங்கள் செல்ல மாட்டோம் என்று கூறிவருகின்றனர். மேலும், வழிபாட்டுக்காக கோயிலுக்கு வந்த பட்டியலின மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவரான ரவி மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வளவனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதற்றமான சூழல் நிலவுவதால், கடந்த 18-ம் தேதி முதல் கோயிலைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை குற்றச்சாட்டு

    June 29, 2025
    மாநிலம்

    “முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்” – ஹெச்.ராஜா கருத்து

    June 29, 2025
    மாநிலம்

    ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!

    June 29, 2025
    மாநிலம்

    எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    June 29, 2025
    மாநிலம்

    “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

    June 29, 2025
    மாநிலம்

    ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ – ஜூலை 7 முதல் பழனிசாமி சுற்றுப்பயணம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 10 படங்களை தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம்!
    • மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை குற்றச்சாட்டு
    • உங்கள் முகத்தை ஐசிங் செய்வது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதா? அதன் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பயன்பாட்டு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு
    • வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.