Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மேட்டூர் அணை 16 கண் மதகு பாலம் புனரமைப்பு பணி: தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் ஆய்வு
    மாநிலம்

    மேட்டூர் அணை 16 கண் மதகு பாலம் புனரமைப்பு பணி: தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் ஆய்வு

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மேட்டூர் அணை 16 கண் மதகு பாலம் புனரமைப்பு பணி: தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் ஆய்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் வலுப்படுத்தும் மற்றும் புனரமைப்பு பணியை நீர்வளத்துறை நீர் ஆய்வு நிறுவனம் மற்றும் நீரியியல் தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று (ஜூன் 3) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் இருக்கவும், வெள்ள நீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் மேட்டூர் அணை கட்டப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீரை வெளியேற்ற 16 கண் மதகு அமைக்கப்பட்டு, வெள்ள உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றும் வகையில் வடிவமைத்து கட்டப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 16 கண் பாலத்தை வலுப்படுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதையடுத்து 16 கண் பாலத்தை வலுப்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஐஐடி கட்டமைப்பு பொறியியல் துறை பேராசிரியர் அழகுசுந்தரமூர்த்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 16 கண் பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு அறிக்கையின் படி, தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து கடந்த மாதம் 16 கண் மதகு பாலத்தை ரூ 19.55 கோடியில் வலுப்படுத்தவும், புனரமைப்பு செய்யும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில், நீர்வளத் துறையின் சென்னை நீர் ஆய்வு நிறுவனம் மற்றும் நீரியியல் தரக்கட்டுப்பாடு தலைமை பொறியாளர் சுந்தர் ராஜன் தலைமையில் தரக்கட்டுப்பாடு பிரிவு செயற்பொறியாளர் புகழேந்தி. உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி. உதவி பொறியாளர் லதா ஆகியோர் இன்று 16 கண் மதகு பாலத்தை ஆய்வு செய்தனர்.

    16 கண் மதகு பாலத்தை வலுப்படுத்துதல், புனரமைப்பு பணிகள் நடைபெறுவது குறித்தும் கேட்டறிந்தனர். பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்வையிட்டு, பொருட்கள் தரம் உள்ளிட்டவைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, அணையின் சுரங்க கால்வாய் மற்றும் 5 கண் மதகு பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ், கௌதம், பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

    June 30, 2025
    மாநிலம்

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: மத்திய அமைச்சர் எல்​.​முருகன் தகவல்

    June 30, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு: தமிழக அரசு பெருமிதம்

    June 30, 2025
    மாநிலம்

    டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருப்பது ஏன்? – டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்

    June 30, 2025
    மாநிலம்

    கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

    June 30, 2025
    மாநிலம்

    அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாள்பட்ட சிறுநீரக நோய்: இந்த எளிய சமையலறை மூலப்பொருள் நாள்பட்ட சிறுநீரக நோய் முன்னேற்றத்தை மெதுவாக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த கடும் எதிர்ப்பை மீறி கேரள பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி
    • நெல்லையை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ்!
    • திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்
    • இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் உலக சராசரியைவிட மிகவும் குறைவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.