Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மேட்டூர் அணையில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் திறப்பு: 45 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைப்பு
    மாநிலம்

    மேட்டூர் அணையில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் திறப்பு: 45 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைப்பு

    adminBy adminJune 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மேட்டூர் அணையில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் திறப்பு: 45 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 18,290 கன அடியாகவும், மாலை 37, 263 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, இன்று காலை விநாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 112.73 அடியாக இருந்த நிலையில் மாலை 114 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 842.34 டிஎம்சியாக இருந்த நிலையில், 84.22 டிஎம்சியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 22,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    எனவே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான120 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. அணை நிரம்பினால், உபரிநீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அதனைக் கண்காணிக்கவும் நீர்வளத்துறை சார்பில் அணை இடது கரையில் வெள்ள நீர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், விரைவில் அணை முழுகொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. நீர்வரத்தை கண்காணிக்க அணையின் இடது கரையில் 16 கண் மதகு பகுதியில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 8 உதவி பொறியாளர்கள் உள்பட 45 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் வெள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

    4 மணி நேரத்துக்கு ஒருமுறை நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நீர்வரத்து கண்காணிக்கப்படும். அதேநேரத்தில் முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் வெள்ள நிலவரம் கண்காணிக்கப்பட்டு, தேவைக்கேற்ப உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாநகராட்சியின் 32 சேவைகளை வாட்ஸ்அப்பில் வழங்கும் திட்டம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

    August 26, 2025
    மாநிலம்

    விடியல் எங்கே? – திமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி

    August 26, 2025
    மாநிலம்

    மேட்டூர் அனல் மின் நிலைய உலர் சாம்பல் விற்பனை முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    August 26, 2025
    மாநிலம்

    தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு ‘சூப்பர் சமூக முதலீடு’ – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    August 26, 2025
    மாநிலம்

    மேட்டூர் அனல்மின் நிலைய உலர் சாம்பல் விற்பனை முறைகேடு: ஆவணங்களுடன் ஆஜராக டான்ஜெட்கோ இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவு

    August 26, 2025
    மாநிலம்

    “எந்த நம்பிக்கையில் ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்?” – தமிழிசை

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உடலில் அதிக சி-ரியாக்டிவ் புரதம் (சிஆர்பி) நிலை என்ன அர்த்தம், அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது, அதை எவ்வாறு குறைக்க முடியும்? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு காஷ்மீரில் கனமழை: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை நிறுத்தம் – டெல்லிக்கு ரெட் அலர்ட்!
    • விவோ T4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
    • ரூ.500 கோடி வசூலை எட்டியது ‘கூலி’
    • மாநகராட்சியின் 32 சேவைகளை வாட்ஸ்அப்பில் வழங்கும் திட்டம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.