மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 23,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 30,800 கனஅடியாக அதிகரித்தது. அணையின் 16 கண் மதகுகள் வழியாக நேற்று காலை முதல் மீண்டும் உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 22,500 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 7,500 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் தொடர்கிறது.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.