Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
    மாநிலம்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

    adminBy adminJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 25-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 35,400 கனஅடியாகவும், நேற்று காலை 45,400 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு 75,400 கனஅடியாகவும், மாலை ஒரு லட்சத்து 400 கனஅடியாகவும் அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணியின் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 18,000 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக 82,000 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்தும், தேவைக்கேற்ப நீரை வெளியேற்றியும் வருகின்றனர்.

    சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில், மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ஒகேனக்கல்லில்… தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக இருந்த நீ்ரவரத்து நேற்று காலை முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒகேனக்கல் காவிரியில் மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 88,000 கனஅடியாக அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் ஓட்டிகள் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிப் பகுதிக்குச் செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்துச் சென்ற நிலையில், அப்பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜூலை 30-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடு: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    July 28, 2025
    மாநிலம்

    தவெக நிகழ்ச்சிகளில் விஜய்யை தவிர வேறு படங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை; பட்டாசு வெடிக்க தடை

    July 28, 2025
    மாநிலம்

    ஊட்டி கர்நாடக அரசு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘நடன மங்கை’ ஆர்கிட் மலர்கள்

    July 28, 2025
    மாநிலம்

    சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

    July 28, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆக.2 வரை மழைக்கு வாய்ப்பு

    July 28, 2025
    மாநிலம்

    வறுமை ஒழிப்பில் முன்னோடி மாநிலம் தமிழகம்: அரசு பெருமிதம்

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்
    • வெள்ளை முட்டைகள் மற்றும் பழுப்பு முட்டைகள்: வித்தியாசம் என்ன, எது ஆரோக்கியமானது? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தனித்துவமான விண்வெளி ரேடார் பூமியின் ஒவ்வொரு ஷேக் & ஷிப்டைக் கண்காணிக்கும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சத்தீஸ்கர், ஜார்க்கண்டில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு
    • உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.