Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மூத்த கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
    மாநிலம்

    மூத்த கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

    adminBy adminAugust 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மூத்த கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கல்​வித் துறை​யில் பல்​வேறு சீர்​திருத்​தங்​களில் ஈடு​பட்ட மூத்த கல்​வி​யாள​ரும், முன்​னாள் துணைவேந்​தரு​மான வே.வசந்​தி தேவி சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ம் ஆண்​டில் திண்​டுக்​கல்​லில் பிறந்தார். ராணி மேரி கல்​லூரி​யில் பேராசிரியை பணி​யில் சேர்ந்த அவர், 1988 முதல் 1990-ம் ஆண்டு வரை கும்​பகோணத்​தில் உள்ள அரசு மகளிர் கல்​லூரி​யின் முதல்​வ​ராக பணி​யாற்​றி​னார்.

    1992 முதல் 1998-ம் ஆண்டு வரை இவர் மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழக துணைவேந்​த​ராக பணி​யாற்​றி​னார். அதன்பின் 2002 முதல் 2005 ம் ஆண்டு வரை தமிழகத்​தின் மாநில மகளிர் ஆணை​யத்​தின் தலை​வ​ராக​வும் இருந்​தார். குறிப்​பாக 1980-களின் இறு​தி​யில் உசிலம்​பட்டி பெண் சிசுக்​கொலைகளை, களத்​துக்​குச் சென்று தரவு​களோடு ஆவணப்​படுத்​தி​னார்.

    பணி ஒய்​வுக்கு பின்​னர் கற்​றல் நலனுக்​கான பள்​ளிக்​கல்வி பாது​காப்பு இயக்​கத்தை தொடங்கி தொடர்ந்து சேவை​யாற்றி வந்தார். தமிழக அரசு உரு​வாக்கி உள்ள பள்ளி மேலாண்​மைக் குழு​விலும் பங்​களித்​திருக்​கிறார். இதுத​விர வசந்தி தேவி 2016-ம் ஆண்டு ஆர்​.கே.நகரில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவை எதிர்த்து விசிக சார்​பில் போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தார். பல்​வேறு கல்வி மற்​றும் மகளிர் மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு காரண​மாக இருந்​தவர்.

    அதே​போல், துணைவேந்​த​ராக பணி​யாற்​றுகை​யில் பல்​கலைக்​கழகத்​தில் சமூகக் கல்​வியைப் பாடத்​திட்​டத்​தின் ஒரு பகுதியாக்கி​னார். அவர் கொண்​டு​வந்த முக்​கிய​மான திட்​டங்​களில் ஒன்று கிராமப்​புறப் பெண்​களுக்கு சைக்​கிள் பயிற்சி அளிக்கும் திட்​டம் மிக​வும் வரவேற்பை பெற்​றது.

    சென்னை வேளச்​சேரி​யில் வசித்​து​வந்த அவருக்கு நேற்று மதி​யம் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு மரணமடைந்​தார். அவரது உடல், பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக அவரது இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து வசந்​திதே​வி​யின் விருப்​பப்​படி அவரின் உடல் கேஎம்சி மருத்​து​வ​மனைக்கு இன்று காலை தான​மாக வழங்​கப்பட உள்​ளது.

    வசந்தி தேவி மறைவு தொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், “மூத்த கல்​வி​யாள​ரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்​தி​யறிந்து மிகுந்த வேதனை அடைந்​தேன். மாநில திட்​டக் குழு உறுப்​பினர் உள்பட பல்​வேறு உயர் பொறுப்​பு​களில் சிறந்த பங்​களிப்பை வழங்​கியதுடன், சமூகத்​தின் மீதும் பெரும் அக்​கறை கொண்​ட​வ​ராக வசந்தி தேவி திகழ்ந்​தார். அனை​வருக்​கும் சமச்​சீ​ரான கல்வி கிடைக்க இறு​தி​மூச்சு வரை போராடிய​வர்.

    கல்வி மீண்​டும் மாநிலப் பட்​டியலில் சேர்க்​கப்பட வேண்​டு மென தொடர்ந்து வலி​யுறுத்​தி​னார். அவரது திடீர் மறைவு கல்வித்துறை மற்​றும் மனித உரிமைச் செயற்​பாட்​டுக் களத்​தில் ஈடு​செய்ய முடி​யாத இழப்​பாகும். இவ்​வாறு கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் உள்​ளிட்ட அரசி​யல்​ தலை​வர்​கள்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பாஜக நிர்வாகி அலெக்சிஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவு செல்லாது: ஐகோர்ட்

    August 3, 2025
    மாநிலம்

    சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள ரூ.30 கோடியில் 477 நீர் இறைக்கும் வாடகை டிராக்டர்கள்!

    August 3, 2025
    மாநிலம்

    ​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி

    August 3, 2025
    மாநிலம்

    தேனி மாவட்டத்தில் வெடித்த உட்கட்சி பூசல்: திமுக எம்.பி. – எம்எல்ஏ இடையே காரசாரமான வாக்குவாதம் – நடந்தது என்ன?

    August 3, 2025
    மாநிலம்

    “மன்னார் அண்ட் கம்பெனியை முதலில் ஓபிஎஸ் கலைக்க வேண்டும்!” – போட்டுத் தாக்கும் பெங்களூரு புகழேந்தி நேர்காணல்

    August 3, 2025
    மாநிலம்

    ​​​​​​​முதல்வர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி வருகை: மின்சார கார் தொழிற்சாலையை திறந்துவைக்கிறார்

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மஞ்சள் காமாலை, தோல் மற்றும் கண்களின் மஞ்சள்: அது ஏன் நடக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்
    • சாட்ஜிபிடி பயனர்களின் சாட்கள் கூகுளில் கசிவா? – ஓபன் ஏஐ விளக்கம்
    • ஜெய்ஸ்வால் சதம்: ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷி அரை சதம்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு – ஓவல் டெஸ்ட்
    • நல்ல அதிர்ஷ்டத்திற்காக ஒரு அரோவானா மீன் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.