Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மூச்சுவிடுவதில் சிரமம்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றம்
    மாநிலம்

    மூச்சுவிடுவதில் சிரமம்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றம்

    adminBy adminAugust 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மூச்சுவிடுவதில் சிரமம்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு மாற்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணுக்கு இரவில் திடீரென மூச்​சு​விடு​வ​தில் சிரமம் ஏற்பட்டதால், நந்​தனம் தனி​யார் மருத்​து​வ​மனையி​லிருந்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். மருத்​து​வர்​கள் குழு​வினர் அவரது உடல்​நிலை​யைக் கண்​காணித்து தேவை​யான சிகிச்​சைகளை அளித்து வரு​கின்​றனர்.

    இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு. கடந்த 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

    தலை​யில் தையல் போடப்​பட்​டு, தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த அவரை மருத்​து​வர்​கள் குழு​வினர் கண்​காணித்து வந்​தனர். மேலும் 100 வயதாகி​யுள்ள அவருக்கு வயது மூப்பு காரண​மாக உடம்​பில் ஏற்​பட்​டுள்ள மற்ற சில பிரச்​சினை​களுக்​காக நரம்​பியல், நுரை​யீரல், இதயம் மருத்​துவ நிபுணர்​கள் குழு​வினர் சிகிச்சை மேற்​கொண்​டனர்.

    இந்​நிலை​யில், அவருக்கு இருந்த நுரை​யீரல் கோளாறால் நேற்று முன்​தினம் இரவு சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. எனவே அவர் உடனடி​யாக சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

    மருத்​து​வர்​கள் குழு​வினர் அவரது உடல்​நிலை​யைக் கண்​காணித்து தேவை​யான சிகிச்​சைகளை அளித்து வரு​கின்​றனர். ‘மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட​போது இருந்​ததை விட, தற்​போது நல்​ல​கண்​ணு​வின் உடல்​நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது’ என்று மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

    குடும்​பத்​தினர், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், துணைச் செய​லா​ளர்​கள் மு.வீர​பாண்​டியன், நா.பெரிய​சாமி, சமூக சமத்​து​வத்​துக்​கான டாக்​டர்​கள் சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் மருத்​து​வர் ஜி.ஆர்​.ர​வீந்​திர​நாத் ஆகியோர் மருத்​து​வ​மனை​யில் தங்கி நல்​ல​கண்​ணுவை கவனித்து வரு​கின்​றனர்.

    நேற்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, விசிக தலை​வர் திரு​மாவளவன் மருத்​து​வ​மனைக்கு வந்து நல்​ல​கண்​ணு​வின் உடல்​நிலை குறித்து விசா​ரித்​தனர். அதே​போல் தவெக தலை​வர் நடிகர் விஜய் மற்​றும் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த் ஆகியோர் செல்​போனில் நல்​ல​கண்​ணு​வின் பேரனை தொடர்பு கொண்டு உடல்​நிலை குறித்​து வி​சாரித்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு ஆக.28-க்கு தள்ளிவைப்பு: திருப்பத்தூரில் போலீஸ் குவிப்பு

    August 26, 2025
    மாநிலம்

    ஆன்லைன் சேவையில் ஓடிபிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

    August 26, 2025
    மாநிலம்

    நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மோசடி வாரிசு சான்றிதழ் மூலமாக 3 பேர் உரிமை கோருவதாக போனி கபூர் வழக்கு

    August 26, 2025
    மாநிலம்

    மாநகராட்சியின் 32 சேவைகளை வாட்ஸ்அப்பில் வழங்கும் திட்டம்: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

    August 26, 2025
    மாநிலம்

    விடியல் எங்கே? – திமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி

    August 26, 2025
    மாநிலம்

    மேட்டூர் அனல் மின் நிலைய உலர் சாம்பல் விற்பனை முறைகேடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆம்பூர் கலவர வழக்கின் தீர்ப்பு ஆக.28-க்கு தள்ளிவைப்பு: திருப்பத்தூரில் போலீஸ் குவிப்பு
    • 10 நாட்களுக்கு தினமும் 5 நனைத்த பாதாம் உட்கொள்வதன் 10 சுகாதார நன்மைகள்
    • கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்
    • ஆன்லைன் சேவையில் ஓடிபிக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!
    • வயிற்று புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.