Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முறையாக சம்மன் அனுப்பாமல் விசாரணைக்கு அழைத்து யாரையும் துன்புறுத்த கூடாது: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு
    மாநிலம்

    முறையாக சம்மன் அனுப்பாமல் விசாரணைக்கு அழைத்து யாரையும் துன்புறுத்த கூடாது: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முறையாக சம்மன் அனுப்பாமல் விசாரணைக்கு அழைத்து யாரையும் துன்புறுத்த கூடாது: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சம்மன் அனுப்பாமல் யாரையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்த கூடாது என காவல் ஆய்வாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தனக்கு எதிரான சிவில் வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தன்னை விசாரணை என்ற பெயரில் அழைத்து எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என உத்தரவிட கோரி எம்.ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில், ‘மனுதாரருக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

    பதிலுக்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.டி.அருணன், ‘‘மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தனது இஷ்டம்போல விசாரணைக்கு வரவழைத்து மனுதாரரை துன்புறுத்தி வருகிறார்’’ என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:லலிதாகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முறையான சம்மன் இல்லாமல் யாரையும் விசாரணை என்ற பெயரில் அழைக்க கூடாது. விசாரணைக்காக வரும்படி அழைத்து அவர்களை போலீஸார் துன்புறுத்த கூடாது. விசாரணைக்கு அழைப்பதாக இருந்தால் சட்ட ரீதியாக சம்மன் அனுப்பி, அதில் விசாரணைக்கான நேரம், இடம் போன்றவற்றையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    பெரும்பாலான வழக்குகளில், போலீஸார் தங்களை விசாரணைக்கு அழைத்து தொந்தரவு செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அதிக அளவில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அதுபோன்ற சூழலில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்துவிட முடியாது. ஒரு புகார் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், அது சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

    எனவே, புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் அல்லது சாட்சியம் அளிக்க வருபவர்களிடம் முறையாக விசாரணை நடத்தி அதுகுறித்த விவரங்களை காவல் நிலையத்தில் உள்ள வழக்கு டைரி, பொது டைரி போன்றவற்றில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். இந்த விசாரணை சட்டப்பூர்வமாகவே இருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை அனைத்து காவல் ஆய்வாளர்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்: அஸ்​வின் அகர்​வால் வலியுறுத்தல்

    September 23, 2025
    மாநிலம்

    தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறேனா? – அண்ணாமலை சொன்ன ஷாக் பதில்!

    September 23, 2025
    மாநிலம்

    பழங்குடியின மக்களின் மொழிகளை பாதுகாக்க ரூ.3 கோடியில் ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    September 23, 2025
    மாநிலம்

    துறையூர் அருகே முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

    September 23, 2025
    மாநிலம்

    நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு: பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம் 

    September 23, 2025
    மாநிலம்

    திமுக பொதுக்கூட்டம் நடந்த சாலையில் ஆம்புலன்ஸை விட வேண்டாம் என பேசிய நாகர்கோவில் மேயர்: வீடியோவால் சர்ச்சை

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அக்டோபர் மாதம் வெளியாகும் ‘மருதம்’!
    • கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்: அஸ்​வின் அகர்​வால் வலியுறுத்தல்
    • மீண்டும் புதிய வரலாற்று உச்சம்: ரூ.84,000-ஐ எட்டியது தங்கம் விலை!
    • இதய ஆரோக்கியம்: மாரடைப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்படக்கூடிய 5 எச்சரிக்கை அறிகுறிகள்
    • அரசியல் லட்சியங்கள் கிடையாது: லாலு மகள் ரோஹிணி கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.