Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலை. பேராசிரியர் பணியிடை நீக்கமா? – ராமதாஸ் கேள்வி
    மாநிலம்

    முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலை. பேராசிரியர் பணியிடை நீக்கமா? – ராமதாஸ் கேள்வி

    adminBy adminMay 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக பெரியார் பல்கலை. பேராசிரியர் பணியிடை நீக்கமா? – ராமதாஸ் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது தவறுகளை விமர்சித்தவர்களையும் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயலும், அதை திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

    பெரியார் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானபோது, துணைவேந்தராக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கும் குறைவான பதவிக்காலமே இருக்கும் போது, புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்று உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த சுனில் பாலிவால் அனுப்பியிருந்த சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பதிவாளர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியான நிலையில் அதைக் காரணம் காட்டி வைத்தியநாதனை பதிவாளர் மூலம் பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் ஆணையிட்டுள்ளார். இது தவறானது. துணைவேந்தருக்கு எதிரான இரு வழக்குகளின் விசாரணையில் வைத்தியநாதன் முதன்மை சாட்சியாக இருப்பதால் அவரை பழிவாங்கும் நோக்குடனும், மிரட்டும் நோக்குடனும் இந்த நடவடிக்கையை துணைவேந்தர் மேற்கொண்டுள்ளார். இது துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிரானது.

    துணைவேந்தர் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இத்தகைய பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை அரசு அனுமதிக்கக்கூடாது; இதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் கூடாது. இதற்கெல்லாம் மேலாக, துணைவேந்தர் பொறுப்பிலிருந்து தாம் ஓய்வு பெற்றாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமக்கு ஆதரவாக உள்ள சில பேராசிரியர்களை நிர்வாகக் குழுவில் நியமிக்கவும் துணைவேந்தர் திட்டமிடுவதாக தெரிகிறது.

    பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஊழல் செய்தவர் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் புதிய சட்டத்தின் மூலம் அரசுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதிலும் அதைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் அமைதியாக இருக்காமல், உதவி பேராசிரியர் வைத்தியநாதனின் பணியிடை நீக்கத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்; அத்துடன் துணைவேந்தர் ஜெகநாதன் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் – கட்சித் தலைவர்கள் கண்டனம்

    July 11, 2025
    மாநிலம்

    உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

    July 11, 2025
    மாநிலம்

    “பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே இபிஎஸ் மாறிவிட்டார்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    July 11, 2025
    மாநிலம்

    “என் பேச்சை கேட்காத அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது” – ராமதாஸ் ஆவேச பேச்சு

    July 11, 2025
    மாநிலம்

    திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் இடமாற்ற முடிவை கைவிட தினகரன் வலியுறுத்தல்

    July 11, 2025
    மாநிலம்

    இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்த சீமானை கைது செய்க: இந்து மக்கள் கட்சி

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 7 குடலுக்கு நல்லது என்று அன்றாட உணவுகள், ஒரு சிறந்த அமெரிக்க காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
    • மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் – கட்சித் தலைவர்கள் கண்டனம்
    • உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து
    • “பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸாகவே இபிஎஸ் மாறிவிட்டார்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.