Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, January 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது: நயினார் நாகேந்திரன் உறுதி
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது: நயினார் நாகேந்திரன் உறுதி

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது: நயினார் நாகேந்திரன் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு என்றும், அங்கு அரசியல் இருக்காது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அதையடு்த்து ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும், அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து விட்டதாகவும் கூறி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக நயினார் நாகேந்திரன் நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக ஆஜரானார். அப்போது நயினார் நாகேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், டி.ராஜா, கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.

    ராபர்ட் புரூஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சீனிவாஸ் ஆஜராகி நயினார் நாகேந்திரன் தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதன்பிறகு நயினார் நாகேந்திரன் சாட்சி கூண்டில் ஏறி சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக இ்ந்த வழக்கின் ஆவணங்கள் தொடர்பாக சாட்சியம் அளித்தார். அப்போது இந்த ஆவணங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சான்றொப்பம் செய்யப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு ராபர்ட் புரூஸ் தரப்பி்ல் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கி்ல் நயினார் நாகேந்திரனை குறுக்கு விசாரணை செய்வதற்காக நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவி்ட்டார்.

    உயர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் நடைபெற உள்ள மாநாடு ஆன்மிக மாநாடு அல்ல, அது அரசியல் மாநாடு என்ற திமுகவின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். மதுரையில் நடைபெறவிருப்பது உண்மையான முருக பக்தர்களின் மாநாடு. சில மாதங்களுக்கு முன்பாக பக்தியே இல்லாதவர்கள் பழநியில் மாநாடு நடத்தினர்.

    ஆனால் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு. அங்கு அரசியல் இருக்காது. எந்தவொரு அரசியலும் அங்கு பேசமாட்டோம். இந்த மாநாட்டுக்காக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் மதுரைக்கு வரவுள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை மத்திய அமைச்சர் அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார். தேர்தல் முடிந்தபிறகும் அவர் தமிழகம் வருவார், என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நூபுர் சனோனின் திருமண லெஹங்கா பஞ்சாபி மற்றும் மலையாளத்தில் காதல் குறிப்புகளைக் கொண்டிருந்தது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த எளிய சமையலறை ஹேக் சில நிமிடங்களில் மேத்தி இலைகளை சுத்தம் செய்கிறது; இனி முடிவில்லா பறிப்பு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுட்டெரிக்கும் வெயிலில் என் சாமான்களை இழுத்தேன், என் கைகளில் ரத்தம் வரும் வரை: நான் நினைவில் கொள்ள விரும்பாத கோவா அனுபவம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 7 செடிகளை உங்கள் வீட்டிலிருந்து அகற்ற வேண்டும், குறிப்பாக உங்களிடம் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் இருந்தால் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மேரி கோம்-ஆன்லர் கோம் விவாகரத்து: முன்னாள் கணவர், தங்கள் குழந்தைகள் அவளது விவகாரத்தால் மனம் உடைந்ததாக வெளிப்படுத்துகிறார், அவர்கள் “மனிதனை அடிக்க” விரும்பினர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.