Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு! – போட்டிக்காகவா, போட்டியிடுவதை அதிகரிப்பதற்காகவா?
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு! – போட்டிக்காகவா, போட்டியிடுவதை அதிகரிப்பதற்காகவா?

    adminBy adminJuly 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு! – போட்டிக்காகவா, போட்டியிடுவதை அதிகரிப்பதற்காகவா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து மதுரையில் அண்மையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதிரவைத்தது இந்து முன்னணி. மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது இந்து முன்னணி தான் என்றாலும் மாநாட்டின் பலனை தங்களுக்கானதாக அறுவடை செய்து கொண்டது பாஜக.

    மாநாட்டை நடத்துவதற்கு காவல் துறை தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் நீதிமன்றம் வரைக்கும் சென்று தளர்த்தி மாநாட்டை நடத்தி முடித்தார்கள். இந்த நிலையில், முருகபக்தர்கள் மாநாடு கூட்டப்பட்ட அதே அம்மா திடலில் 6-ம் தேதி, மனிதநேய மக்கள் கட்சி (தமுமுக அரசியல் பிரிவு) மாநில மாநாட்டை நடத்துவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்து முன்னணி மாநாட்டுக்குப் போட்டியாக இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் என ஒரு தரப்பினரும், முஸ்லிம்களின் பலத்தைக் காட்டி அதற்கேற்ப கூட்டணியில் சீட் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த மாநாடு என ஒரு தரப்பினரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த மாநாடு குறித்து நம்​மிடம் பேசிய மனிதநேய மக்​கள் கட்​சி​யின் மாநில தலை​வர் ஜவாஹிருல்​லா, மே 31-ம் தேதியே மதுரை​யில் இந்த மாநாட்டை நடத்த திட்​ட​மிட்​டோம். திமுக பொதுக்​குழு, அதன் பிறகு முரு​கபக்​தர்​கள் மாநாடு என அடுத்​தடுத்து வந்​த​தால் எங்​களது மாநாடு தள்​ளி​போனது. நாங்​கள் யாருக்​கும் போட்​டி​யாக மாநாடு நடத்​த​வில்​லை. நாட்டின் சட்​டம் இயற்​றும் அவை​களில் முஸ்​லிம்​களுக்​கான உரிய பிர​தி​நி​தித்​து​வம் தேவை என வலி​யுறுத்​து​வதே மாநாட்​டின் நோக்​கம்.

    எங்​களுக்​கு, நாடாளு​மன்​றம், சட்​டமன்​றத்​தில் உரிய பிரநி​தித்​து​வம் இல்லை என, உணரு​கி​றோம். இந்​தச் சூழலில் தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் மேற்​கொண்​டுள்ள பிஹார் மாநிலத்​தில் அது தொடர்​பாக பல்​வேறு கேள்வி​கள் கேட்​கப்​பட்​டுள்​ளன. தேசிய குடி​யுரிமை பட்​டியலிலுள்ள தகவல்​களை பட்​டியலில் சேர்க்க வேண்​டும் என்ற நிலை உள்​ளது. எல்​லோரும் எல்லா ஆவணங்​களை​யும் வைத்​திருக்க முடி​யாது. இது போன்ற சூழலில் சிறு​பான்​மை, ஒடுக்​கப்​பட்ட, பட்​டியலினத்​தவர்​களின் வாக்​கு​கள், மற்​றும் அங்கே ஆளும் தரப்​புக்கு ஆதர​வாக வாக்​களிக்​காதோரின் வாக்​குரிமை பறிக்​கப்​படுமோ என அஞ்​சுகி​றோம். இதையெல்​லாம் மனதில் வைத்தே இம் மாநாட்டை நடத்​துகி​றோம்.

    தேர்​தல் சமயத்​தில் கூடு​தல் சீட்​களை பெறு​வதற்​காக இந்த மாநாடு நடத்​தப்​படு​கிறதா என்று கேட்​டால், நாங்​கள் கூடு​தல் சீட் கேட்​போம். அதில் மாற்​றுக் கருத்து கிடை​யாது. பாராளு​மன்​றத்​தில் உள்ள 543 உறுப்​பினர்​களில் 80 இஸ்​லாமியர்​கள் இருக்​கவேண்​டும். ஆனால், 24 பேர் மட்​டும் உள்​ளனர். ராஜ்ய சபா​வில் 35 உறுப்​பினர்​கள் இருக்க வேண்​டிய இடத்​தில் 13 பேர் மட்​டுமே உள்​ளனர். தமி​ழ​கத்​தில் 14 இஸ்​லாமிய எம்​எல்​ஏ-க்​கள் இருக்க வேண்​டிய இடத்​தில் 7 பேர் மட்​டுமே இருக்​கி​றோம்.

    இந்​தியா முழுக்க 4,123 எம்​எல்​ஏ-க்​கள் இருக்​கி​றார்​கள். இதில் 296 பேர் மட்​டுமே இஸ்​லாமிய எம்​எல்​ஏ-க்​கள். உள்​ளாட்​சிகளி​லும் எங்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் இல்​லை. தமி​ழ​கத்​தில் 7 சதவீதம் இஸ்​லாமியர்​கள் இருக்​கி​றோம். ஆனால், அதற்​கேற்ப எங்​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் இல்​லை. இதையெல்​லாம் பேசுவதற்​காகத்​தான் மாநாட்​டைக் கூட்​டு​கி​றோம். இந்த மாநாட்​டில் 2 லட்​சம் பேர் கூடு​வார்​கள் என எதிர்​பார்க்​கி​றோம்” என்​றார்.

    ஆளும் கட்சி தொடங்கி அனைத்​துக் கட்​சிகளும் மதுரையை மையப்​படுத்​தியே மாநாடு உள்​ளிட்ட தங்​களது நிகழ்ச்​சிகளை நடத்தி பலம் காட்டி வரு​வ​தால் தூங்கா நகரம் துறு​துறுப்​பாய் இயங்​கிக் கொண்​டிருக்​கிறது!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீலகிரி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

    July 4, 2025
    மாநிலம்

    ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது

    July 4, 2025
    மாநிலம்

    பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்: அன்புமணி

    July 4, 2025
    மாநிலம்

    “அன்புமணிக்கு தொண்டனாகவும் செயல்படுவேன்” – பாமக எம்எல்ஏ அருள் திடீர் உருக்கம்

    July 4, 2025
    மாநிலம்

    அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

    July 4, 2025
    மாநிலம்

    புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீலகிரி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது
    • கோவிட் தடுப்பூசி மற்றும் திடீர் மாரடைப்பு: டெல்லி ஐம்ஸ் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு
    • ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
    • மழைநீர் குடிப்பது பாதுகாப்பானதா? விஞ்ஞானிகள் பதிலை வெளிப்படுத்துகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.