Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்த உதவும்: காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்த உதவும்: காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்

    adminBy adminJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்த உதவும்: காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

    மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடக் கூடாது என்று ஒரு கோஷ்டி கருதியது. அறநிலையத் துறை அமைச்சர் விரதம் இருக்கிறார் என்ற தகவலும் வந்தது.

    இந்த மாநாடுக்கு விளம்பரம் செய்வது பற்றி யோசித்துபோது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வைகோ, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மாநாடு பற்றி பேசியே, அதிக விளம்பரம் தேடிக் கொடுத்தனர். இதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறோம்.

    இந்த மாநாடு எதற்கு, ஆந்திராவில் இருந்து துணை முதல்வர் எதற்காக வரவேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார். அவர் ரூ.400 கோடியில் மாநாடு நடத்தப் போகிறோம் என்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என சொல்ல வேண்டும். கோயில் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறதா என கணக்குக் கொடுக்க வேண்டும்.

    நாங்கள் மாநாட்டுக்குரிய செலவு, கணக்குகளைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நீங்களும் வெளியிடத் தயாராக இருக்க வேண்டும். சென்னிமலையை மாற்றுவோம் என்று சொன்னார்கள். முருகனுக்கு கோபம் வந்தது. நீதிமன்றத்தில் நீதி வென்றது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு மணி நேரத்தில் அதிகமான கூட்டத்தை கூட்டினோம். அதுபோல, முருக பக்தர் மாநாட்டை தடை செய்ய மிரட்டல் விடுக்கப்பட்டது. கடைசியாக நீதிமன்றம் சென்று மாநாட்டை நடத்துகிறோம்.

    ஏறத்தாழ 7 லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இது முருக பக்தர்கள் மாநாடு. அரசியல் மாநாடு அல்ல. தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவிகரமாக இருக்கும். மாநாட்டில் பங்கேற்க வருமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம்.

    எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது பிரதிநிதிகளாக முன்னாள் அமைச்சர்கள் வந்துள்ளனர். முதல்வரை நேரில் சந்தித்து, மாநாட்டு அழைப்பிதழ் வழங்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம், அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பல்கலைக்கழக வேந்தராக மாநில கல்வி அமைச்சர் இருக்க வேண்டும்: அசோக் வர்தன் ஷெட்டி வலியுறுத்தல்

    July 14, 2025
    மாநிலம்

    ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழப்பு: கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி முதியவர் மரணம்

    July 14, 2025
    மாநிலம்

    இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

    July 14, 2025
    மாநிலம்

    கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக

    July 14, 2025
    மாநிலம்

    மின்வாரியத்தில் மாற்றுத் திறனாளிகள் பதவி உயர்வில் சலுகை அறிவிப்பு

    July 14, 2025
    மாநிலம்

    ஜூலை 24-ம் தேதி முதல் 36 தொகு​திகளில் இபிஎஸ் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

    July 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் – அல்கராஸை வீழ்த்தி அபாரம்!
    • ‘அங்கமாலி டைரிஸ்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் மதுமிதா!
    • பல்கலைக்கழக வேந்தராக மாநில கல்வி அமைச்சர் இருக்க வேண்டும்: அசோக் வர்தன் ஷெட்டி வலியுறுத்தல்
    • கறி இலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் காம்போ என்பது பளபளப்பான, மென்மையான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கான ரகசியம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 26 மில்லியன் ஆண்டுகளில் உலகம் முழுவதும்: யூரோமா இனங்களின் பரிணாமம் பட்டாம்பூச்சிகளைப் போலவே மூச்சடைக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.